சென்னை:
மிழகத்தில் கோடை விடுமுறைக்கு பின் பள்ளிகள் திறப்பு குறித்து இன்று முக்கிய அறிவிப்பு வெளியாகிறது.

பொதுவாக ஆண்டு இறுதித்தேர்வு முடிவும்போதே, கோடை விடுமுறையும் அறிவிக்கப்பட்டு, பள்ளி திறப்பு தேதியும் வெளியிடப்படும். ஆனால், இந்த ஆண்டு, பள்ளி இறுதி ஆண்டு தேர்வு முடிந்து விடுமுறை தொடங்கிய நிலையில், இதுவரை கோடை விடுமுறைக்கு பிறகு பள்ளிகள் திறப்பு எப்போது என்ற தகவல் தெரிவிக்கப்படவில்லை. இதனால், மாணவ மாணவிகளும், பெற்றோர்களும், ஆசிரியர்களும் குழப்பத்துடன் இருந்து வருகின்றனர். இந்த நிலையில், இன்று பள்ளிகள் திறப்பு தொடர்பாக தகவல் வெளியாக உள்ளது.

பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், வரும் கல்வியாண்டுக்கான தேர்வு தேதி அறிவிப்புகளையும் இன்று காலை வெளியிடுகிறார்.