மெரிக்க மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக வந்த செய்தி குறித்து விஷால் தனது டுவிட்டர் பதிவில் பதிவிட்டுள்ளார். அதில் தான் நலமோடு இருப்பதாக கூறி உள்ளார்.

நடிகர் சங்கம் மற்றும் தயாரிப்பாளர் சங்க  தலைவராக இருந்து வருபவர் நடிகர் விஷால். இவருக்கு அவ்வப்போது ஒற்றைத் தலைவலி வரும். இதற்காக அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.

சமீபகாலமாக மித்ரன் இயக்கத்தில் உருவாகும் இரும்புத்திரை படத்திலும், லிங்குசாமியின் சண்டக்கோழி 2 படத்திலும் நடித்து வருகிறார். இதன் காரணமாக மீண்டும் ஒற்றை தலைவலி ஏற்பட்டதால், டில்லியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக கூறப்பட்டது. அதைத்தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக அமெரிக்க மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் வதந்திகள் பரவியது.

இந்நிலையில், தனது உடல்நிலை பற்றி பரவி வரும் வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். அதில், “நான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக கடந்த சில நாட்களாக வதந்தி பரவி வருகிறது. என்னுடைய நண்பர்கள், ரசிகர்கள் ஆகியோர் முதலில் தெரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால், நான் நலமாக இருக்கிறேன். எனக்கு ஒற்றை தலைவலி இருப்பதால், அதற்கு சிகிச்சை பெற்று தற்போது ஓய்வில் இருக்கிறேன். இதையடுத்து, வரும் மார்ச் முதல் வாரத்தில் நான் வந்துவிடுவேன்” என்று கூறியுள்ளார்.

விஷாலின் ஒற்றைத்தலைவலிக்கு காரணம் அவர், இயக்குனர் பாலாவின் அவன் இவன் படத்தில் மாறுகண் வேடத்தில் நடித்ததே காரணம் என்றும் கூறப்படுகிறது.