மும்பை

பிரபல நடிகை கங்கணா ரணாவத் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை என்றால் கைது வாரண்ட் பிறப்பிக்கப்படும் என நீதிபதி எச்சரித்துள்ளார்.

பிரபல நடிகை கங்கணா ரணாவத் முன்பு ஒரு தொலைக்காட்சி பேட்டியின் போது இந்தி பாடலாசிரியர் ஜாவேட் அக்தரை இழிவு படுத்தும்படி கருத்து தெரிவித்துள்ளார்.  இதையடுத்து பாடலாசிரியர் ஜாவேத் அக்தர் நடிகைக்கு எஹ்டிராக் அந்தேரி நீதிமன்றத்தில் மன நஷ்ட வழக்கு தொடர்ந்தார்.

நேற்று நடந்த   இந்த வழக்கு விசாரணைக்கு கங்க்ணா  ரணாவத் ஆஜராகவில்லை.  அவருக்கு உடல் நலக்குறைவு எனக் காரணம் கூறப்பட்டது.  ஜாவேத் அகதரின் வழக்கறிஞர், “கடந்த பிப்ரவரி மாதத்தில் இருந்து கங்கணாவுக்கு நீதிமன்றம் பலமுறை சம்மன் அனுப்பியும் அவர் ஒரு முறை கூட ஆஜராகவில்லை.. வழக்கை இழுத்தடிக்க கங்கணா திட்டமிட்டு இவாறு நாடகம் ஆடுகிறார்.” எனத் தெரிவித்தார்,

இது குறித்து நீதிபதி நேற்றைய விசாரணைக்கு மட்டும் கங்கணாவுக்கு விலக்கு அளித்து விசாரணையை வரும் 20 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளார்.  அன்றைய தினம் கங்கணா அவசியம் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் எனவும் அவ்வாறு ஆஜராகத் தவறினால் அவரை கைது செய்ய வாரண்ட் பிறப்பிக்கப்படும் என நீதிபதி எச்சரித்துள்ளார்.