லண்டன்:

லகக்கோப்பை கிரிக்கெட் போட்டில் இன்று இலங்கையுடன் இந்தியா ஆட உள்ள நிலையில், இந்திய அணியில் இருந்து வேகப்பந்து வீச்சாளர் பும்ராவுக்கு ஓய்வு அளிக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது.

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகள் இங்கிலாந்தில் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் இன்று நடைபெறவுள்ள 44வது லீக் போட்டியில் இந்தியா மற்றும் இலங்கை அணிகள் மோதுகின்றன. இந்நிலையில் இன்றைய போட்டியில் பந்துவீச்சாளர் பும்ராவிற்கு ஓய்வளிக்கப்பட்டு, ஆல்ரவுண்டரான ஜடேஜா அணியில் இடம்பெற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

இதுவரை நடைபெற்றுள்ள உலகக்கோப்பை போட்டிகளில் இந்தியா – இலங்கை அணிகள் 8 முறை மோதியுள்ளன. அதில் 3  முறை இந்திய அணியும், 4 முறை இலங்கை அணியும் வெற்றி பெற்றுள்ளன. மேலும், ஒரு போட்டி கைவிடப்பட்டது.

இந்த நிலையில், உலகக்கோப்பை போட்டியில் அரையிறுதி வாய்ப்பை இழந்து விட்ட இலங்கை அணி இன்று இந்தியாவை எதிர்கொள்கிறது.