துபாய்: கடந்த 10 ஆண்டுகளில், சிறப்பாக செயல்பட்ட கிரிக்கெட் வீரர்களுக்கான விருதுகளுக்கு, இந்தியா சார்பில், விராத் கோலி, தோனி மற்றும் அஸ்வின் உள்ளிட்டவர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.

ஐசிசி சார்பில், கடந்த 10 ஆண்டுகளில் சிறப்பாக செயல்பட்ட கிரிக்கெட் வீரர்களுக்கு, பல்வ‍ேறு விருதுகள் வழங்கப்படுவது வழக்கம். இதன்படி, இந்த விருதுகளுக்குப் பரிந்துரைக்கப்பட்ட வீரர்களின் பட்டியலை வெளியிட்டது ஐசிசி.

அதில், இந்தியா சார்பில் பலரது பெயர் இடம்பெற்றுள்ளது.

* சிறந்த கிரிக்கெட் வீரர் விருதுக்கு கோலி மற்றும் அஸ்வின் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.

* சிறந்த ஒருநாள் போட்டி வீரர் விருதுக்கு தோனி, ரோகித் மற்றும் கோலி பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.

* சிறந்த டெஸ்ட் வீரர் விருதுக்கு விராத் கோலி பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.

* சிறந்த டி-20 வீரர் விருதுக்கு ரோகித் மற்றும் கோலி பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.

* சிறந்த கிரிக்கெட் வீராங்கனை விருதுக்கு மிதாலி ராஜ் பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.

* சிறந்த ஒருநாள் போட்டி வீராங்கனை விருதுக்கு, ஜூலான் கோஸ்வாமி மற்றும் மிதாலி ராஜ் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.