சென்னை:
மிழ்நாட்டில் 30க்கும் மேற்பட்ட ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள உத்தரவின் அடிப்படையில், செய்தித்துறை இயக்குனராக இருந்த ஜெயசீலன், விருதுநகர் மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார். செய்தித்துறை இயக்குனராக மோகன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். விளையாட்டு மேம்பாட்டுத்துறை உறுப்பினர் செயலராக மேகநாத ரெட்டியும், இந்து சமய அறநிலையத்துறை ஆணையராக முரளிதரனும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், தொழில்துறை சிறப்புச் செயலாளராக பூஜா குல்கர்னியும், தகவல் தொழில்நுட்பத்துறை செயலாளராக குமரகுருபரனும், , பள்ளிக்கல்வித்துறை சிறப்புச் செயலாளராக ஜெயந்தியும், ஆதிதிராவிடர் நலத்துறை செயலாளராக லட்சுமி பிரியாவும், வழிகாட்டி நிறுவனத்தின் மேலாண் இயக்குனராக விஷ்ணுவும், தாம்பரம் மாநகராட்சி ஆணையராக அழகு மீனாவும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியராக ஶ்ரீதர், விழுப்புரம் ஆட்சியராக பழனி, திருநெல்வேலி ஆட்சியராக கார்த்திகேயன், பெரம்பலூர் ஆட்சியராக கற்பகம், தேனி ஆட்சியராக ஷாஜீவனா, கோவை ஆட்சியராக கிராந்தி குமார், திருவாரூர் ஆட்சியராக சாருஸ்ரீ, மயிலாடுதுறை ஆட்சியராக மகாபாரதி, கிருஷ்ணகிரி ஆட்சியராக தீபக் ஜேக்கப், தென்காசி ஆட்சியராக ரவிச்சந்திரன் ஆகியோரும் நியமனம் செய்யப்படுவதாக தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.