னி தான் திரைப்படங்களில் நடிக்கப்போவதில்லை என்று கமல் உறுதிபட தெரிவித்துள்ளார்.

மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை துவக்கியுள்ள நடிகர் கமல்ஹாசன், அரசியலில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். நேற்று மகளிர் மாநாடு நடத்தினார், தொடர்ந்து மாநாடு பொதுக்கூட்டங்கள் நடத்தவும் திட்டமிட்டுள்ளார்.

இந்த நிலையில் மும்பையில் நடைபெற்று வரும் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:

“ நான் பாஜகவுக்கு எதிரானவன் அல்ல, பாஜகவின் மக்கள் விரோத கொள்கைக்கு எதிரானவன். நான் இந்து விரோதி அல்ல, இந்துத்துவாவுக்கு எதிரானவன்.

எனது திரை வாழ்க்கை நிறைவு பெற்றது,  இனி சாகும்வரை மக்கள் பணியாற்றவே விரும்புகிறேன்.

தமிழகத்தில் குப்பை அரசியல் நடைபெற்று வருகிறது. தமிழகத்தின் மாற்றத்துக்காக மக்கள் வாக்களிக்க வேண்டும். தமிழகத்தில் அடுத்த அரசை நாங்கள் அமைக்க முயற்சிசெய்வோம்.

தேர்தலில் வெற்றி பெறுவதை விட சித்தாந்தமே முக்கியமானது. பணம் சம்பாதிக்க நான் அரசியலுக்கு வரவில்லை.

இனி ஊழல் அரசியல்வாதிகளுக்கு எந்த இடமும் இல்லை. காந்தி, பெரியார், அம்பேத்கார் ஆகிய தலைவர்கள்தான் எனது ஹீரோக்கள்”  என்று அவர் பேசினார்.