சென்னை: வெறுப்பு மற்றும் பிரிவினை அரசியலால் எனது தந்தையை இழந்தேன், அன்பான நாட்டை  இழக்க மாட்டேன் என ஸ்ரீபெரும்புதூர் ராஜீவ் நினைடத்தில் மரியாதை செலுத்திய ராகுல்காந்தி, அதுதொடர்பான படத்துடன் டிவிட் பதிவிட்டுள்ளார்.

பாரத் ஜோடோ யாத்திரையை இன்று மாலை கன்னியாகுமரியில் தொடங்கும் ராகுல்காந்தி, இன்று காலை, சென்னை அருகே உள்ள திருப்பெரும்புதூரில் அமைந்துள்ள ராஜீவ்காந்தியின் நினைடத்தில் முதன்முறையாக மலர்தூவி மரியாதை செய்தார். தொடர்ந்து சில நிமிடங்கள் அங்கு தியானம் செய்தவர், நினைவிடத்தில் மரங்களை நட்டார்.

இதுகுறித்து டிவிட் பதிவிட்டுள்ள ராகுல்,

வெறுப்பு மற்றும் பிரிவினை அரசியலால் எனது தந்தையை இழந்தேன்; ஆனால், என் நாட்டை இழக்க மாட்டேன்.

அன்பு, வெறுப்பை வெல்லும்; நம்பிக்கை, பயத்தை வெல்லும்

இன்று மாலை  ஒற்றுமை நடைபயணத்தை இன்று தொடங்கவுள்ள நிலையில் ராகுல் காந்தி இவ்வாறு  டிவிட் பதிவிட்டுள்ளார்.