குறிஞ்சிப்பாடி:

டலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடியில்  தனியார் பள்ளி ஆசிரியையை மர்ம நபர் ஒருவர் பள்ளி வளாகத்திலேயே கழுத்தை அறுத்து கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

குறிஞ்சிப்பாடியில் காயத்ரி மெட்ரிகுலேசன் என்ற தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு ரம்யா என்ற இளம்பெண் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இன்று வழக்கம்போல பள்ளிக்கு காலை 8 மணி அளவில் வருகை தந்த ரம்யா, பள்ளி வளாகத்தில் நின்று கொண்டி ருந்தார். பள்ளிக்கு மாணவ மாணவிகள் வந்துகொண்டிருந்தனர்.

கொலை நடந்த பள்ளி – கொலையான ஆசிரியை

அந்த நேரத்தில், மர்ம நபர் ஒருவர் திடீரென பள்ளி வளாகத்துக்குள் புகுந்து, ஆசிரியை ரம்யாவை சரமாரியாக அடித்து உதைத்து, அவரது கழுத்தை கூர்மையான கத்தியால் அறுத்துவிட்டு தப்பி விட்டார். இதில் பலத்த காயம் அடைந்த  சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து உடடினயாக பள்ளி நிர்வாகம் தரப்பில் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த சம்பவத்தை கண்ட பள்ளி மாணவ மாணவிகளும் அதிர்ச்சி அடைந்தனர். உடடினயாக சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த குறிஞ்சிப்பாடி போலீசார், கொலை செய்யப்பட்ட ரம்யாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குறிஞ்சிப்பாடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த கொலை தொடர்பாக அந்த பள்ளியில் உள்ள ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.  கொலைக்கு காரணம் காதல் பிரச்சினையாயாக இருக்குமோ என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.

கொலையாளி யார் என்பது குறித்து அறிய, பள்ளி வளாகத்தில் பொருத்தப்பட்டிருந்த காமிரா பதிவை காவல்துறையினர் வாங்கிச் சென்றிருப்பதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பள்ளிக்கு இன்று முழுவதும் விடுமுறை விடப்பட்டுள்ளது.