நீலகிரி:
நீலகிரி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வெளியான வானிலை மைய அறிவிப்பை தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் அம்ரித், இந்த விடுமுறை அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

தயார் நிலையில் தேசிய பேரிடர் மீட்புப் படை:

நீலகிரி மாவட்டத்தில் கனமழை எச்சரிக்கை எதிரொலி காரணமாக, 44 பேர் கொண்ட தேசிய பேரிடர் மீட்புப்படை தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.