பெங்களூரு:
ர்நாடக மாநிலத்தில் கடந்த ஒரு வாரமாக தொடர்ச்சியாக கன மழை பெய்து வருவதை கர்நாடக மாநிலத்தில் உள்ள 10 மாவட்டங்களில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது.

தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வருவதன் காரணமாக கேரளா கர்நாடகா உள்பட பல மாநிலங்களில் கன மழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்.

இந்த நிலையில் கர்நாடக மாநிலத்தில் உள்ள பெரும்பாலான மாவட்டங்களில் கடந்த ஒரு வாரமாக கனமழை பெய்து வருவதால் இயல்பு வாழ்க்கை பாதித்தது.

இதனை அடுத்து கர்நாடக மாநிலத்தில் உள்ள 10 மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது. கனமழை தொடர்ந்து பெய்தால் விடுமுறை மேலும் நீடிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.