புதுச்சேரி

விடாமல் தொடரும் கனமழை காரணமாக புதுச்சேரி மற்றும் காரைக்கால் பள்ளிகளுக்கு முதல்வர் நாராய்ணசாமி விடுமுறை அறிவித்துள்ளார்.

மத்திய அரசால் கடந்த மார்ச் மாத இறுதியி8ல் நாடெங்கும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமலானது.  இதையொட்டி புதுச்சேரியில் அனைத்து பள்ளிகளும் மூடப்பட்டன.  அடுத்தடுத்து அறிவிக்கப்பட்ட தளர்வுகளின் அடிப்படையில் மக்களின் இயல்பு வாழ்க்கை சிறிது சிறிதாகத் திரும்பி வருகிறது.

புதுச்சேரியில் கடந்த அக்டோபர் 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு வகுப்புக்கள் செயல்பட்டு வருகின்றன.   மேலும் இன்று முதல் கல்லூரிகள் திறக்கப்பட்டு இளங்கலை மற்றும் முதுகலை மாணவர்களுக்கு வகுப்புக்கள் தொடங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரியில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.  இதையொட்டி புதுச்சேரியில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து முதல்வர் நாராயணசாமி உத்தரவிட்டுள்ளார்.   அத்துடன் காரைக்காலிலும் கன மழை பெய்து வருவதால் இங்கும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.