Hindu Yuva Vahini Goons attack police station to rescue 5 in jail who were detained at the Sadar Bazaar Police Station, beat up Police, torch vehicles

உத்தரப்பிரதேசம் ஆக்ராவில், யுவவாஹினி என்ற இந்துத்துவா அமைப்பைச் சேர்ந்த குண்டர்கள், காவல்நிலையத்திற்குள் புகுந்து தாக்குதல் நடத்தி, அங்கு கைதியாக இருந்த அதே அமைப்பைச் சேர்ந்த 5 பேரை விடுவித்துள்ளனர்.

 

அன் அஃபிஷியல் சுப்பிரமணியன் சுவாமி (Unofficial: Subramanian Swamy) என்ற பெயரில் இயங்கி வரும் முகநூல் பக்கத்தில் இந்த படங்கள் வெளியிடப்பட்டுள்ளன. சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்தவர்களைத் தாக்கியதற்காக கைது செய்யப்பட்டு, காவலில் வைக்கப்பட்டிருந்த 5 பேரைத்தான் யுவ வாஹினி என்ற இந்தக் கும்பல் விடுவித்துள்ளது. இந்தத் தாக்குதலில் படுகாயமடைந்த காவல்துறை துணை கண்காணிப்பாளர் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். காவல்நிலையத்திற்கு முன்பாக நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களையும் இந்துவெறியர்கள் அமைப்பைச் சேர்ந்த இக்கும்பல் தீவைத்துக் கொளுத்தியுள்ளது. உத்தரப்பிரதேசத்தில், காவல்துறையினரை மருத்துவமனைக்கு அனுப்பிவிட்டு, இந்துத்துவா அமைப்புகளைச் சேர்ந்த குண்டர்களே சட்டம் ஒழுங்கைக் கையில் எடுத்திருப்பதாக அந்த முகநூல் பக்கத்தில் விமர்சிக்கப்பட்டுள்ளது.