சென்னை

ன்று சென்னை ஜி எஸ் டி சாலையில் உள்ள தபால் நிலையத்தில் திமுகவினர் இந்தி எழுத்துக்களை கருப்பு மை  வைத்து அழித்துள்ளனர்.

தமிழக அரசு புதிய தேசிய கல்விக்கொள்கை மற்றும் அதில் இருக்கும் மும்மொழிக் கொள்கை ஆகியவற்றை ஏற்கமாட்டோம் என்ற நிலைப்பாட்டில் உறுதியாக உள்ள நிலையில், தேசிய கல்விக் கொள்கையை அனைத்து மாநிலங்களிலும் அமல்படுத்துவதில் மத்திய அரசு உறுதியாக உள்ளது.

திமுக மும்மொழிக் கொள்கை வழியாக மத்திய அரசு இந்தியை திணிப்பதாக தெரிவித்து போராட்டங்களை முன்னெடுத்துள்ளது. மேலும் அதிமுக, விசிக, தவெக உள்ளிட்ட கட்சிகளும் மத்திய அரசின் தேசிய கல்விக் கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

இந்தி திணிப்புக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கோவை மாவட்டம் பொள்ளாச்சி மற்றும் நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை ரெயில் நிலையத்தில் உள்ள பெயர் பலகையில் இடம் பெற்றிருந்த இந்தி எழுத்துக்களை திமுகவினர் அழித்தனர் இன்று சென்னை ஜிஎஸ்டி சாலையில் உள்ள தபால் நிலையத்தில் எழுதப்பட்டிருந்த இந்தி எழுத்துக்களை திமுகவை சேர்ந்தவர்கள் கருப்புமை வைத்து அழித்துள்ளனர்.