டெல்லி: இந்தியாவின் தேசிய மொழிகளில் இந்தியும்  ஒன்று என உச்சநீதிமன்றம் தெரிவித்து உள்ளது.

உத்தரபிரதேச மாநிலத்தில் நடைபெற்று வந்த வழக்கை, டெல்லிக்கு மாற்றுமாறு மனுதாரர் கோரிய நிலையில், அதற்குகாரணமாக தனக்கு இந்தியா தெரியாது என வாதிடப்பட்டது. இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், இந்தியாவின் தேசிய மொழிகளில் இந்தியும்  ஒன்று தெரிவித்து உள்ளது.

மேற்கு வங்க மாநிலம் டாா்ஜீலிங்கில் நடைபெற்ற சாலை விபத்து தொடா்பான வழக்கு தொடர்பாக உ.பி. மாநில மோட்டாா் வாகன இழப்பீட்டு தீா்ப்பாயத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட நபா்,  மேற்குவங்க மாநிலத்தைச் சேர்ந்தவர். அதனால், அவர் இந்த வழக்கை  தனது சொந்த மாநிலமான மேற்கு வங்கத்துக்கு மாற்ற வேண்டும் என கோரி உச்சநீதி மன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில்,  தனக்கு இந்தி தெரியாது என்றும், அதனால், உ.பி. நீதிமன்றத்தில் இந்தியில் சாட்சியம் அளிக்க முடியாது என்பதால் வழக்கை மேற்கு வங்கத்துக்கு மாற்ற வேண்டும் என்று  முறையிட்டாா்.

இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதி தீபாங்கா் தத்தா, ‘பன்முகத்தன்மை கொண்ட இந்தியாவில் பல்வேறு மொழிகள் பேசப்படுகின்றன. 22 அலுவல் மொழிகள் உள்ளன. எனினும், ஹிந்தி தேசிய மொழிகளில் ஒன்றாகும். ஹிந்தி தெரியாது என்ற மனுதாரரின் கோரிக்கையை ஏற்றுக் கொண்டால், எதிா்தரப்பினா் தங்களுக்கு வங்காளி தெரியாததால் மேற்கு வங்கத்துக்கு வழக்கை மாற்றக் கூடாது எனக் கோர வாய்ப்புள்ளது. சாட்சியங்கள் கூறுவதை ஹிந்தியில் மொழி பெயா்க்கலாம். மேலும், வழக்கை விரைந்து முடிக்க சம்பவம் நடைபெற்ற மாநிலத்துக்கு மாற்றக் கோரும் கோரிக்கையையும் ஏற்றுக் கொள்ள முடியாது. பாதிக்கப்பட்டவா் வசிக்கும் இடத்துக்கு அருகே வழக்கை நடத்துவதற்கு ஏதுவாகத்தான் மோட்டாா் வாகன சட்டத்தில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது’ எனக் கூறி மனுவை தள்ளுபடி செய்தனா்.

தமிழ்நாடு தலையாட்டி பொம்மை மாநிலம் அல்ல! உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கண்டனம்..