புதுடெல்லி:
சி.பி.எஸ்.இ. 12ம் வகுப்பு பொதுத் தேர்வு குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

12-ம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்து முடிவு செய்வதற்காக அனைத்து மாநில கல்வி மந்திரிகள் மற்றும் கல்வித்துறை செயலாளர்களுடன் மத்திய அரசு இன்று உயர்மட்ட ஆலோசனை நடத்தியது.

காணொலி காட்சி மூலம் ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால், பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை மந்திரி ஸ்மிரிதி இரானி மற்றும் தகவல் ஒலிபரப்புத்துறை மந்திரி பிரகாஷ் ஜவடேகர் ஆகியோர் பங்கேற்றனர்.

இந்நிலையில், சி.பி.எஸ்.இ. 12ம் வகுப்பு பொதுத் தேர்வு குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.