சென்னை: அதிமுக பொதுக்குழுவுக்கு தடை விதிக்க மறுத்த சென்னை உயர்நீதிமன்றம் வழக்கு விசாரணையை ஜூலை 22ந்தேதிக்கு தள்ளி வைத்தது.

அதிமுக செயற்குழு, பொதுக்குழு கூட்டம் ஜூன் 23ஆம் தேதி நடைபெறும் என அக்கட்சி அறிவித்துள்ளது. இநத  பொதுக்குழுக் கூட்டத்திற்கு தடை விதிக்கக் கோரி திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி அருகேயுள்ள ஆவிலிபட்டியை சேர்ந்த அதிமுக உறுப்பினர் எஸ்.சூரியமூர்த்தி சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அவரது மனுவில்,  அதிமுக பொதுச்செயலாளராக இருந்த ஜெயலலிதா மறைவுக்குப் பின், 2017ஆம் ஆண்டு கட்சியின் விதிகளுக்கு முரணாக கட்சியின் ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிச்சாமியும் தேர்ந்தெடுக்கப்பட்டதாகவும், இந்த பதவிகளை ஏற்றுக்கொண்டு எந்த ஆவணத்தையோ, கடிதத்தையோ தேர்தல் ஆணையம் கட்சிக்கு தரவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ்., துணை ஒருங்கிணைப்பாளர் இ.பி.எஸ். இணைந்து சென்னை உரிமையியல் அதிமுக பொதுக்குழுக் கூட்டத்திற்கு தடை விதிக்கக் கோரிய வழக்கை நிராகரிக்கக் கோரி  மனுத் தாக்கல் செய்தனர். அதில்,  அங்கீகரிக்கப்பட்ட கட்சியின் உட்கட்சி விவகாரத்தில் தலையிட தேர்தல் ஆணையத்திற்கு உரிமையில்லை. சிவில் நீதிமன்றத்திற்குத்தான் உரிமை உள்ளது என்று சென்னை உயர் நீதிமன்றம் அதிமுக கட்சி தொடர்பான வழக்கில் கடந்த 2020ஆம் ஆண்டு உத்தரவிட்டுள்ளதைச் சுட்டிக்காட்டிய மனுதாரர், கட்சியின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவியை எந்த உரிமையியல் நீதிமன்றமும் அங்கீகரிக்கவில்லை எனவும், அதிமுகவின் உச்சபட்ச பதவியான பொதுச் செயலாளர் பதவியை நீக்கியது சரிதான் என்று எந்த நீதிமன்றமும் தெரிவிக்கவில்லை எனவும் கூறியிருந்தனர்.

இந்த மனுமீதான விசாரணை,  நான்காவது உதவி உரிமையியல் நீதிமன்ற நீதிபதி பிரியா முன்பு நடைபெற்ற கடந்த விசாரணையின்போது,  மனுதாரர் சூரியமூர்த்தி அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் இல்லாததால் உட்கட்சி விவகாரத்தில் தலையிட முடியாது என்பதால் மனுவை நிராகரிக்கக்கோரி வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. அத்துடன்,  வழக்கு குறித்து சூரியமூர்த்தி பதிலளிக்க உத்தரவிட்டது. மேலும், அ.தி.மு.க பொதுக்குழுவிற்கு எதிராக நீதிமன்றம் எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது என்று மறுத்துவிட்டதுடன், வழக்கு விசாரணையை ஜூலை 22ஆம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளனர்.

இதன் காரணமாக, அதிமுக பொதுக்குழுகூட எந்த தடையும் இல்லை. திட்டமிட்டபடி வரும் 23ந்தேதி அதிமுக செயற்குழு, பொதுக்கூட்டம் நடைபெறும் என்பது உறுதியாகி உள்ளது.