ஐகோர்ட்டு புதிய தலைமைநீதிபதி இந்திரா பானர்ஜி

டில்லி,

சென்னை ஐகோர்ட்டுக்கு புதிய தலைமை நீதிபதியாக டில்லி ஐகோர்ட்டு தலைமை  நீதிபதி இந்திரா பானர்ஜி நியமிக்கப்பட்டு உள்ளார்.

சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி கவுல்  பதவி உயர்வு பெற்று  உச்சநீதி மன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார். அதையடுத்து சென்னை ஐகோர்ட்டின் தலைமை நீதிபதி பதவி காலியாக இருந்தது.

அதையடுத்து, டில்லி உயர்நீதி மன்ற நீதிபதியாக பதவி வகித்த இந்திரா பானர்ஜியை, சென்னை ஐகோர்ட்டின் தலைமை நீதிபதியாக நியமித்து ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்.

இவர் ஏற்கனவே கல்கத்தாவில் உயர்நீதி மன்ற நீதிபதியாக பதவி வகித்தவர். பின்னர் சுப்ரீம் கோர்ட்டு கொலிஜியம் பரிந்துரையின் பேரில் டில்லி ஐகோர்ட்டின் தலைமை நீதிபதியாக பதவி ஏற்று வகித்து வந்தார்.

தற்போது சென்னை ஐகோர்ட்டின் தலைமை நீதிபதியாக மாற்றப்பட்டுள்ளார்.

சென்னை ஐகோர்ட்டின் முதல் பெண் நீதிபதியாக காந்த கமாரி பட்நாகர்  (15 June 1992 – 1 July 1993) ஏற்கனவே பதவி வகித்துள்ளார். அதையடுத்து, சென்னை ஐகோர்ட்டின் இரண்டாவது பெண் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி  நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.