சென்னை:
20 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு கனமழை தொடரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம்வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட 20 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு கனமழை தொடரும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி,திருநெல்வேலி, நீலகிரி, கோவை, திருப்புர்,ஈரோடு, சேலம், நாமக்கல், திண்டுக்கல், வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களிலும் மழை தொடரும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.