சென்னை:
ளிமண்டல கீழடுக்கு சுழற்சியால், பல மாவட்டங்களில் இன்று கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில், தமிழகம் மற்றும் கடலோர ஆந்திர பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.அதனால், நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, கரூர், ஈரோடு, நாமக்கல், திருச்சி,தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், திருப்பத்துார், வேலுார், ராணிபேட்டை,கள்ளக்குறிச்சி, தென்காசி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, விருதுநகர் மற்றும் துாத்துக்குடி மாவட்டங்களில், இன்று கன மழை பெய்யும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். சில இடங்களில் மிதமான மழை பெய்யும் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.