சென்னை

தலைநகர் சென்னை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.

சென்னை நகரில் எழும்பூர், சிந்தாதிரிப்பேட்டை, சென்டிரல், கோயம்பேடு, நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், கிண்டி, மாம்பலம், சைதாப்பேட்டை, அண்ணாசாலை, தேனாம்பேட்டை, புரசைவாக்கம், பட்டினப்பாக்கம், திருவல்லிக்கேணி, மயிலாப்பூர், ஆவடி, திருமுல்லைவாயல், பட்டாபிராம் பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது.

மேலும் கிண்டி, ஆலந்தூர்,வேளச்சேரி, தாம்பரம், சேலையூர் உள்ளிட்ட பகுதிகளிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. சில நாட்களாக கடும் வெப்பம் நிலவி வந்த நிலையில், மழை சற்று குளிர்ச்சியைத் தந்துள்ளதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தலைநகர் சென்னை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் பரவலாகப் பெய்து வரும் மழையால் வெப்பம் தணிந்தது. தொடர்ந்து மேக மூட்டத்துடன் பெய்து வரும் மழையால் வாகனங்கள் முகப்பு விளக்குகளை ஒளிரவிட்டபடி செல்கின்றன.