குற்றாலம்

ன்று குற்றால அருவி அருகே  40க்கும் அதிகமான கடைகளில் திடீரென பயங்கர தீ விபத்து எற்பட்டுள்ளது.

தென்காசி அருகே குற்றாலம் பஜார் பகுதியில் சீசனுக்காக தற்காலிக கடைகள் அமைக்கப்பட்டு இருந்தன. அந்த கடைகளில் திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தற்போது சுமார் 40-க்கும் மேற்பட்ட கடைகளில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இந்த தீ விபத்து குறித்துத் தீயணைப்புத் துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த 20-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள், விரைவாகக் கடைகளில் பரவிய தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

தீ விபத்தால் சுமார் ரூ.5 கோடி மதிப்பிலான பொருட்கள் சேதமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், சிலிண்டர் வெடித்ததால் குற்றாலம் பஜார் பகுதியில் தீ விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.