டெல்லி: சமூக செயற்பாட்டாளர் ஸ்டேன் ஸ்வாமி மறைவுக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி இரங்கல் தெரிவித்து உள்ளார்.

எல்கர் பரிஷத் வழக்கில்  கைது செய்யப்பட்டு மும்பை சிறையில் அடைக்கப்பட்டிருந்து திருச்சியை சேர்ந்த சமூக  செயற்பாட்டாளரான ஸ்டேன் ஸ்வாமி மும்பை அருகே உள்ள தலோஜா சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில், உடல்நிலை பாதிக்கப்பட்டடு, மும்பையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

பழங்குடியினரின் உரிமைகளுக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வந்த ஸ்டேன் ஸ்வாமி மறைவுக்கு பல தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

ஸ்டேன் ஸ்வாமி மறைவுக்கு காங்கிரஸ் தலைவரும், வயநாடு எம்.பி.யுமான ராகுல் காந்தி இரங்கல் தெரிவித்து டிவிட் பதிவிட்டுள்ளார். அதில்,

தந்தை ஸ்டான் சுவாமி மறைவிற்கு ஆழ்ந்த  இரங்கலை தெரிவிப்பதாகவும், அவர் நீதி மற்றும் மனிதாபிமானத்திற்கு தகுதியானவர் என்றும் பதிவிட்டுள்ளார்.

எல்கர் பரிஷத் வழக்கில் கைது செய்யப்பட்டிருந்த 84வயது சமூக செயற்பாட்டாளார் ஸ்டேன் ஸ்வாமி காலமானார்…