சென்னை

திமுக சட்டப்பேரவை உறுப்பினர் ஜெ அன்பழகன் உடல்நிலையில் மேலும் முன்னேற்றம் காணப்படுகிறதாக மருத்துவமனை அறிவித்துள்ளது.

சென்னை திருவல்லிக்கேணி சட்டப்பேரவை தொகுதி உறுப்பினர் ஜெ அன்பழகன் ஆவார்.  இவர் திமுகவைச் சேர்ந்தவர்.  அன்பழகனுக்குக் கடந்த 2 ஆம் தேதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அன்பழகனுக்கு வெண்டிலேட்டர் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டது.  அவரது உடல் நிலையில் தற்போது நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளது.

கடந்த இரு தினங்களுக்கு முன்பு அவருக்கு 80% ஆக்சிஜன் தேவை இருந்ததாகவும் தற்போது 29% குறைந்துள்ளதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அவரின் உடலின் மற்ற பாகங்களின் செயல்பாடு  திருப்திகரமாக இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.