சென்னை

பத்திரப்பதிவு சட்டத்திருத்தத்தை முன் தேதியிட்டு அமல்படுத்த உத்தரவிட முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துள்ளாது.

கடந்த 2022 ஆம் வருடம் மோசடி பத்திரப் பதிவை ரத்து செய்ய மாவட்ட பதிவாளர்களுக்கு அதிகாரம் வழங்கும் சட்டத்திருத்தம் கொண்டு வரப்பட்டது. இந்த சட்ட பிரிவின் அடிப்படையில் 2004-ல் முறைகேடாகப் பதிவு செய்யப்பட்ட பத்திரப்பதிவை ரத்து செய்வது தொடர்பாக தென்சென்னை மாவட்ட பதிவாளர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

காஸ்நவி என்பவர் இந்த நோட்டீசை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.  விசாரணையில் 2004-ல் முறைகேடாகப் பதிவு செய்யப்பட்ட பத்திரப்பதிவை ரத்து செய்வது தொடர்பாகப் பதிவாளர் பிறப்பித்த நோட்டீசை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

சென்னை உயர்நீதிமன்றம்

”மோசடி பத்திரப்பதிவை ரத்து செய்யப் பதிவாளருக்கு அதிகாரம் தரும் சட்டத்தை முன் தேதியிட்டு அமல்படுத்த முடியாது. முன் தேதியிட்டு அமல்படுத்த அனுமதித்தால் பல பத்திரப்பதிவுகள் பற்றி விசாரிக்க கோரிக்கை வரும்”

எனத் தெரிவித்துள்ளது.