கடந்த 2001 முதல் 18 ஆண்டுகளாக 15 நிமிடம் கூட தான், விடுமுறை எடுத்துக்கொள்ளவில்லை என்று பிரதமர் நரேந்திர மோடி பேசியுள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி இந்தோனேஷியா, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்கு அரசுமுறை பயணமாக சென்றிருக்கிறார். கடந்த செவ்வாய்க்கிழமை இந்தோனிஷியா சென்ற அவர், நேற்று முன்தினம் சிங்கப்பூர் சென்றார்.

அங்கு மாணவர்கள் மத்தியில் பேசிய மோடி, , “நான் 2001ஆம் வருடத்தில் இருந்து 15 நிமிடம் கூட விடுமுறை இல்லாமல் நாட்டிற்காக பணியாற்றி வருகிறேன்” என்றார்.

மேலும், “அமைதியாக உறங்குவதற்கு எனக்கு அனுமதி இல்லை என்று நினைக்கிறேன். ராணுவ வீரர்கள் கடுமையான வானிலையை எதிர்கொண்டு நாட்டைக் காப்பாற்றுகிறார்கள். தாய்மார்கள் தங்கள் குழந்தைகளை வளர்ப்பதற்காக பாடுபடுகிறார்கள்

சாமானிய மக்கள்தான் தனக்கு மிகவும் உற்சாகமூட்டுபவர்களாக இருக்கிறார்கள்” என்றும் மோடி பேசினார்.