ண்டிகர்

திருமணம் ஆகாதோர் மற்றும் விதவைகளுக்கு மாதம் ரூ.2750 ஓய்வூதியம் வழங்கப்படும் என அரியான முதல்வர் அறிவித்ஹ்டுள்ளார்.

ஏற்கனவே அரியானா மாநில அரசு 60 வயதுக்கு மேற்பட்ட குறைந்த வருமானம் கொண்டவர்களுக்கு மாதாந்திர ஓய்வூதியம் வழங்கி வருகிறது. தற்போது 45 முதல் 60 வயதுக்குட்பட்ட குறைந்த வருமானம் கொண்ட திருமணமாகாதவர்கள் மற்றும் விதவைகளுக்கு மாதம் ரூ.2,750 ஓய்வூதியம் வழங்குவதாக அறிவித்துள்ளது.

அதாவது ஆண்டு வருமானம் ரூ.1.80 லட்சத்திற்குக் குறைவாக உள்ள 45-60 வயதுக்குட்பட்ட திருமணமாகாத ஆண்கள் மற்றும் பெண்களுக்கு மாதம் ரூ.2,750 ஓய்வூதியம் வழங்கப்படும் என்று முதல்வர் மனோகர் லால் கட்டார் தெரிவித்தார்.

அத்துடன் ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்துக்குக் குறைவாக உள்ள 40-60 வயதுடைய ஆண் மற்றும் பெண் விதவைகளுக்கு மாதந்தோறும் ரூ.2,750 வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.  மாநிலத்தில் இதனால் ஆண்டுக்கு ரூ.240 கோடி கூடுதல் சுமை ஏற்படும் என்று கூறப்படுகிறது.

மாநிலத்தில் இந்த குறிப்பிட்ட வயது மற்றும் வருமான வரம்பில் மொத்தம் 65 ஆயிரம் திருமணமாகாதவர்கள் மற்றும் 5,687 விதவைகள் உள்ளனர் என்று முதல்வர் கட்டார் தெரிவித்துள்ளார் அவர்களின் தனிப்பட்ட தேவைகளைப் பூர்த்தி செய்ய இந்த ஓய்வூதியம் உதவும் என்று கூறிய அவர், 60 வயதை அடைந்த பிறகு அவர்களுக்கு முதியோர் ஓய்வூதியம் வழங்கப்படும் என்று கூறினார்.