நடிகை ஹன்சிகாவுக்கு தமிழில் ’மஹா’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இது அவரது 50வது படமாக உருவாகிறது. தமிழில் எங்கேயும் காதல் படத்தில் அறிமுகமான போது அவரை சின்ன குஷ்பு என்ற செல்ல மாக அழைத்தனர். பட வாய்ப்புகளும் வந்தன. ஒரு கட்டத்தில் அவருக்கு பட வாய்ப்புகள் மங்கியது. முன்னணி ஹீரோக்களுடன் நடித்தவர் புதுமுகங்களுடன் நடிக்கும் சூழலுக்கு வந்தார். இதற்கிடையில் தெலுங்கு படங்களில் கவனத்தை திருப்பி னார். இதனால் ஒரு மொழியில் கவனம் செலுத்த முடியாத நிலை ஏற்பட்டது. புதுமுகங்களின் வருகையும் இவரது வாய்ப்பு களை பறித்தன. ஆரம்பத்தில் ரசிகர்களுட னான தொடர்ப்பை இவர் ஒரு கட்டத்தில் குறைத்துக்கொண்டார். இது அவரை பின்னுக்கு தள்ளியது. தற்போது சிம்புவுடன் ’மஹா’ படத்தில் நடிக்கிறார். இது ஹன்சிகாவின் 50வது படமாக உருவாகிறது. இப்படம் அவரது திரையுலக பயணத்தை வேகமாக்குமா என்பது படம் வந்தபிறகுதான் தெரியும்.


இதற்கிடையில் தனக்கு பெரிய வரவேற்பாக வும் பாராட்டுக்களையும் அள்ளித்தந்த ரோமியோ ஜுலியட் படத்தின் 5வருட நிறைவை கொண்டாடும்விதமாக அதில் நடித்தபோது ஏற்பட்ட மறக்க முடயாத நினைவுகளை ரசிகர்களுடன் இணைய தள வழியாக பகிர்ந்திருக்கிறார்.
’ரோமியோ ஜூலியட் எனக்கு மிகவும் பிடித்த படம். அதில் பணியாற்றியது மறக்கமுடியாத நினைவாக மனதில் பதிந்திருக்கிறது’ என சொல்லி அப்படத்தில் ஜெயம் ரவியுடன் நடித்த காட்சிகளின் படங்களை இணைத்து மகிழ்ச்சி பகிர்ந்திருக்கிறார். இந்த மெசேஜை நடிகர் ஜெயம் ரவி, ரோமியோ ஜூலியட் பட இயக்குனர் லக்‌ஷ்மன் ஆகியோருக்கும் டேக் செய்துள்ளார்.
கடந்த சில தினங்களூக்கு முன்புதான் ஹன்சிகாவுக்கு மும்பை தொழில் அதிபருடன் திருமணம் நடக்கவுள்ளதாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அதை ஹன்சிகா மறுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.