புதுடெல்லி:
நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை இன்று முதல் பதிவிறக்கம் செய்யலாம் சென்று தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.

இதுகுறித்து தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ள அறிவிப்பில்ஜூலை 17-ஆம் தேதி நடைபெறும் நீட் தேர்வு எழுதுவதற்காக தமிழகத்தில் இருந்து ஒரு லட்சத்து 42 ஆயிரத்து 286 பேர் உள்பட நாடு முழுவதும் 18 லட்சத்து 72 ஆயிரத்து 339 பேர் விண்ணப்பித்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் உள்ளிட்ட இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் இன்று முதல் ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என்றும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டை விட இந்த ஆண்டில் கூடுதலாக 2 லட்சத்து 57 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளதாகவும் தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.