கோவை:

டிடிவியின் நடவடிக்கை காரணமாக அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் பாதி அழிந்து விட்டது என்றும், நாளுக்கு நாள் தொய்வு அடைந்து வரும் கட்சியை சரி செய்யாதது வருத்தமளிக்கிறது என்றும் அமமுக நிர்வாகி பெங்களூரு புகழேந்தி கூறினார் உள்ளார்.

புகழேந்தி

நேற்று பெரியார் பிறந்த நாள் தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்ட நிலையில், கோவையில் உள்ள பெரியார் சிலைக்கு அ.ம.மு.க.முன்னாள் செய்திதொடர்பாளர் புகழேந்தி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதையடுத்து செய்தியாளர்களிடம் பேசியவர், அ.ம.மு.க.சார்பில்  வெளியிடப்பட்டசெய்தி தொடர்பாளர்கள் பட்டியலில் எனது பெயர் விடுபட்டு இருந்தது. எனது பெயர் இடம்பெறவில்லை என்ற செய்தியே பெரியதாக விவாதிக்கப்படுகிறது. இந்த பிரச்சினைக்கு  டி.வி. தினகரனும் பதில் அளிக்கவில்லை என்றவர்,இதில் அநீதி ஏற்பட்டு உள்ளது. இது தவறான முடிவு என்று தெரிவித்தார்.

அ.ம.மு.க.தொண்டர்கள் கொத்து கொத்தாககட்சியில் இருந்து வெளியேறி வருவதாக தெரிவித்தவர், அமமுக மண்டல பொறுப்பாளர்களால்தான் அ.ம.மு.க.பாதி அழிந்து விட்டது. அ.ம.மு.க. நான் ஆரம்பித்த கட்சி என்றவர், வேறு கட்சியில்இணைவது குறித்துமுடிவு எடுக்கவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.