குருபெயர்ச்சி – பொதுப்பலன்கள்

வாக்கிய பஞ்சாங்கத்தின்படி சார்வரி வருடம் ஐப்பசி மாதம் 30ம் தேதி (15 நவம்பர் 2020), இரவு மணி 9.48க்கும் திருக்கணித பஞ்சாங்கத்தின்படி கார்த்திகை மாதம் 5ம் தேதி அதாவது 20 நவம்பர் 2020 அன்று ‘குரு பெயர்ச்சி‘ நிகழவிருக்கிறது.

பொதுவாக, கிரகங்கள் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு மாறும்போது  மனிதனின் வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்துவது உறுதி. கிரகப்பெயர்ச்சிகளில் குரு பெயர்ச்சி, சனி பெயர்ச்சி, ராகு-கேது பெயர்ச்சிகளை மிகவும் முக்கியமானவையாகக் கருதப்படுகின்றன.

15.11.2020 அன்று நிகழவிருக்கும் முழு சுபரான குருபகவானின் பெயர்ச்சியின் காரணமாக எந்தெந்த ராசிகளுக்கு எந்தவிதமான பலன் கிடைக்கும் என்பதைப் பார்க்கலாம்.

குரு பகவான் தற்போது தனது சொந்தவீடாகிய தனுசு ராசியில் அமர்ந்திருக்கிறார்.  அவர் அங்கிருந்து மகர ராசிக்குச்  செல்லவிருக்கிறார்.

இங்கு குறிப்பிட்டுள்ள குரு பெயர்ச்சிப் பலன்கள்  ராசியின் அடிப்படையில் கோள்-சார ரீதியாக மட்டுமே சொல்லப்பட்டிருக்கின்றன. ஒருவரின் ஜாதகத்தில் நடக்கக் கூடிய தசா புத்தியைப் பொறுத்து தான் முக்கிய மற்றும் பெரும்பாலான பலன்கள் அமையும் என்பதால் அவற்றையும் ஆராய்ந்து முடிவுக்கு வருவது நல்லது.

குருபகவான் எப்போதுமே தான் அமர்ந்திருக்கும் இடத்தை விட, பார்க்கும் பார்வைக்கு தான் அதிக நற்பலன்களை அளிப்பார்  என்பார்கள். அந்த வகையில் தற்போது மகர ராசிக்கு செல்லும் குரு அந்த ராசிக்கு வழங்குவதை விட அவரின் சுப பார்வைகள் படும் ராசிகளுக்கு சிறப்பான பலன்கள் வழங்குவார்.

குரு, தான் அமர்ந்திருக்கும் இடத்திலிருந்து 5ம் வீடு, 7 ஆம் வீடு, 9ம் வீடு ஆகியவற்றைப் பார்ப்பது இயல்பு.

அவ்வாறாக குரு பகவானின் புனிதப் பார்வை படவிருக்கும் இடங்கள் ரிஷபம், கடகம் மற்றும் கன்னி ஆகிய ராசிகள் ஆகும்.

மகரம் என்பது குரு பகவானின் நீச வீடு ஆகும். எனவே பொதுவாகவே சுப பலன்கள் இந்த வருடம் சற்றுக் குறைவாக இருக்கும் என்பதுதான் பரவலான கருத்து. ஆனால் இதிலும் ஒரு விதிவிலக்கு உண்டு. இன்னும் சிறிது காலத்தில்.. அதாவது, 2020, டிசம்பர் 27 ஆம் தேதியன்று சனிப்பெயர்ச்சி நிகழவுள்ளது. அப்போது நீசமான குருவுடன் ஆட்சிபெற்ற சனி அமர்ந்து நீச பங்கம் அளித்து ராஜயோகமாக்கவுள்ளார்.  ஆகவே குரு பகவானின் நீசத்தன்மை குறையும். அவர் தன்னுடைய சிறப்புப்பணியாகிய திருமணம், குழந்தைப்பேறு, சுப நிகழ்ச்சிகள், பணப்புழக்கம் ஆகியவற்றை உலக மக்களுக்கு அள்ளித்தர உள்ளார்.

குடும்பத்தின் அடிப்படை வசதிகள் பெருகும். பணவரவு உண்டு. திருமணம், சீமந்தம், கிரகப் பிரவேசம் போன்ற சுபநிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். ஆனால், சனி புகவான் உடன் இருப்பதால், எதிலும் பொறுமையைக் கடைப்பிடிப்பது நல்லது.

திருமணம் ஆகாதவர்களுக்குத் திருமணம் ஆகும். குழந்தை பிறக்காதவர்களுக்குக் குழந்தை பிறக்கும். பிள்ளைகள் படிப்பில் முன்னேறுவார்கள், என்று இத்தனை காலம் குரு (தனுசு ராசியில்) ஆட்சியாக இருந்தபோது சொன்னதுபோலவே இப்போதும் சொல்ல அதிக வாய்ப்புள்ளது.

எதிலும் கவனமாகச் செயல்பட வேண்டும். திருமணத்துக்காக வெளியில் கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை உருவாகும். ஆனாலும் திருமணம் நல்லபடியாக முடியும். குழந்தைகளின் படிப்பு தடைப்படுவதுபோல் பயமுறுத்தி, கடைசியில் நல்லபடியாக முடியும். நிதி நிலை சரிந்து, பின் மிக நன்கு உயரும்.

உலக அளவில் சரிந்திருந்த நிதி நிலையும் வணிக வளமும் மெல்லத் தூக்கி நிறுத்தப்படும்.

நின்றுபோயிருந்த மக்களின் உழைப்பு மீண்டும் தொடரவும், அந்த உழைப்புக்கேற்ற நற்பலன்கள் அதிகரிக்கவும் மிக நல்ல வாய்ப்பு உள்ளது.

இவ்வாண்டு நிகழ உள்ள குரு பெயர்ச்சியால் அதிக நற்பலன் பெற உள்ள ராசிகள் ரிஷபம், கடகம், கன்னி, தனுசு, மீனம் ஆகியவை.

ஏனெனில் ரிஷப ராசிக்கு ஒன்பதாம் வீட்டிற்கும், கடக ராசிக்கு ஏழாம் வீட்டுக்கும், தனுசு ராசிக்கு இரண்டாம் வீட்டுக்கும் மீனத்துக்கு லாபஸ்தானமாகிய 11க்கும் வருவது சிறப்பாகும். அதோடு குரு பகவான் ரிஷபம், கடகம், கன்னி ஆகிய ராசிகளைத் தன் அருட்பார்வை கொண்டு பார்க்கவும் இருக்கிறார்.

அதற்காக மற்ற ராசிகளுக்கு நற்பலன்கள் கிடைக்காது என்ற கவலை வேண்டாம். அவர் பார்வை படும் ராசிகள் உங்களுக்கு எந்த வீடு என்று பார்த்து அதில் மேம்பாடு கிடைக்கும் என்பதை தைரியமாக நம்பலாம்.

மேஷம், மிதுனம், சிம்மம், மகரம், கும்பம், ஆகிய ராசியைச் சேர்ந்தவர்களுக்குச் சாதகமான இடத்திற்குச் செல்லாவிட்டாலும் நீசத்தன்மை பெற்றதார் அவர்களுக்கு நன்மை செய்வார்.

எனினும்.. நம் ராசிக்குச் சாதகமாக இருந்தாலும் சரி.. சுமாராக இருந்தாலும் சரி… குரு பகவானை வழிபடுதல் .. அவருக்கான பரிகாரங்கள் செய்தல் நிறைந்த வாழ்வுக்கு வகை செய்யும்.

வியாழக்கிழமை விரதம் இருத்தல், மஞ்சள் வஸ்திரம், லட்டு ஆகியவை தானம் செய்தல், குருவாயூரப்பன், ராகவேந்திரஸ்வாமி.. ஷீர்டி சய்பாபா..  மகா பெரியவர்… ஆசார்ய ஸ்வாமிகள்.. ஜீயர்.. போன்ற எந்த குருவையும் வழிபடுதல் நன்மை தரும். குரு கீதா போன்ற சுலோகங்கள்… சாயி சத்சரிதம்.. குரு சரித்ரம் போன்றவை படித்தல் அற்புத நன்மை தரும். வியாழக்கிழமைகளில் நெய்விளக்கேற்றுதல்.. நவகிரகத்தை 21 முறை சுற்றுதல்.. மூன்று நெய்விளக்கேற்றுதல், தங்க தானம் போன்றவை நிறைவான குருப்ரீதிகள் ஆகும்.

இவற்றைப் பின்பற்றி அனைவரும் நலம் பெறுவோம்.

நட்சத்திரம் வாரியாக குருப்பெயர்ச்சி பலன்கள்

புனர்பூசம்,4 (கடகம்):

இதுவரை ஆறாம் வீட்டில் அமர்ந்து பல கஷ்ட, நஷ்டங்களைத் தந்து, உங்களைத் திணறடித்த குரு பகவான் இனி ராசிக்கு 7 – ம் வீட்டில் அமர்ந்து உங்களோட ராசியை நேருக்கு நேராகப் பார்க்க இருப்பதால், எதிலும் உங்கள் கை ஓங்கும்.

அவர் உங்கள் ராசியையும், ராசிக்கு 3,11 ஆகிய வீடுகளையும் பார்க்கவிருக்கிறார்.

வீண் சண்டை, விவாதங்களிலிருந்து ஒதுங்குவீங்க. உங்களிடம் மறைந்து கிடந்த திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். குடும்பத்தில் சந்தோஷம் பெருகும். திருமணம், சீமந்தம், கிரகப் பிரவேசம், காதுகுத்து போன்ற சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும்.

மனைவிவழி உறவினர்களுடன் இருந்த மோதல்களும் விலகும். மகனுக்கு நல்ல நிறுவனத்தில் வேலை கிடைக்கும். அவருக்கும் எதிர்பார்த்த குடும்பத்திலிருந்த நல்ல பெண் அமைவார். இளைய சகோதரர் வகையில் மகிழ்ச்சி தங்கும். புது பதவிக்கு உங்களுடைய பெயர் பரீசலிக்கப்படும்.

பழுதான வாகனத்தை மாற்றுவீங்க.

பேச்சில் கனிவு பிறக்கும். குழந்தைபாக்கியம் கிடைக்கும்.

நெருக்கடிகளைச் சமாளிக்கும் சக்தி உண்டாகும். தைரியம் கூடும். அரசு காரியங்கள் விரைந்து முடிவடையும்.

வியாபாரத்தில் புதிய முதலீடுகளை இப்போது துணிந்து செய்யலாம். இனி சில சூட்சுமங்களையும், ரகசியங்களையும் தெரிந்துகொண்டு அதற்கேற்ப லாபம் ஈட்டுவீங்க.

மேலதிகாரிகளின் மனநிலையை அறிந்து அதற்கேற்ப செயல்படத் தொடங்குவீங்க. எதிர்பார்த்த பதவி உயர்வு, சம்பள உயர்வு தாமதமின்றி கிடைக்கும். சிலர் உத்தியோகம் சம்பந்தமாக அயல்நாடு சென்று வருவாங்க.

பூசம் (கடகம்):

இதுவரை ஆறாம் வீட்டில் அமர்ந்து பல கஷ்ட, நஷ்டங்களைத் தந்து, உங்களைத் திணறடித்த குரு பகவான் இனி ராசிக்கு 7 – ம் வீட்டில் அமர்ந்து உங்களோட ராசியை நேருக்கு நேராகப் பார்க்க இருப்பதால், எதிலும் உங்கள் கை ஓங்கும்.

அவர் உங்கள் ராசியையும், ராசிக்கு 3,11 ஆகிய வீடுகளையும் பார்க்கவிருக்கிறார்.

பிரிந்திருந்தவர்கள் ஒன்று சேருவீங்க. கணவன், மனைவிக்குள் நெருக்கம் அதிகரிக்கும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். திருமணம் தள்ளிப்போனவர்களுக்குக் கூடி வரும். சமூகத்தில் பெரிய அந்தஸ்தில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும்.

மகளுக்கு அல்லது மகளுக்கு நல்ல வரன் அமையும். திடீர் பயணங்களால் உற்சாகம் அடைவீங்க. வேற்றுமதத்தைச் சார்ந்தவர்கள் உதவுவாங்க. பெற்றோருடன் இருந்து வந்த மனஸ்தாபங்கள் நீங்கும். சிலர் வீடு மாறுவீங்க. விலை உயர்ந்த ஆபரணங்கள் வாங்குவீங்க.

எதிர்ப்புகளையும் தாண்டி முன்னேறுவீங்க. எதிலும் முன்னெச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது.

அரசு வகை காரியங்கள் இழுபறியாகும்.

வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் ரசனையைப் புரிந்து கொள்வீங்க. அயல்நாட்டிலிருப்பவர்களும் உதவுவாங்க. ஏற்றுமதி, இறக்குமதி, பதிப்பகம், கட்டட உதிரிப் பாகங்கள், அரிசி மண்டி வகைகளால் நல்ல லாபம் கிடைக்கும்.

மாணவ மாணவிகளுக்கு அவர்களின் எண்ணங்கள் பூர்த்தியாகும். படிப்பில் ஆர்வம் காட்டுவீங்க. ஆசிரியர் மற்றும் பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். விளையாட்டில் பரிசு பெறுவீங்க

ஆயில்யம் (கடகம்):

இதுவரை ஆறாம் வீட்டில் அமர்ந்து பல கஷ்ட, நஷ்டங்களைத் தந்து, உங்களைத் திணறடித்த குரு பகவான் இனி ராசிக்கு 7 – ம் வீட்டில் அமர்ந்து உங்களோட ராசியை நேருக்கு நேராகப் பார்க்க இருப்பதால், எதிலும் உங்கள் கை ஓங்கும்.

அவர் உங்கள் ராசியையும், ராசிக்கு 3,11 ஆகிய வீடுகளையும் பார்க்கவிருக்கிறார்.

விலை உயர்ந்த தங்க ஆபரணங்கள் வாங்குவீங்க. எதிர்பார்த்திருந்த தொகை கைக்கு வரும். சிலர் வங்கிக் கடன் உதவி கிடைத்து புது வீடு கட்டி குடிபுகுவாங்க. அரசாங்க விஷயங்கள் நல்லவிதத்தில் முடிவடையும். மனைவி உங்களுடைய புது முயற்சிகளுக்குப் பக்கபலமாக இருப்பார். அவரின் ஆரோக்கியம் சீராகும்

குருபகவான் உங்களோட லாப வீட்டைப் பார்ப்பதால் பெரிய திட்டங்கள் தீட்டுவீங்க. ஷேர் மார்க்கெட் மூலமாக பணம் வரும். வெளிமாநில புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீங்க. அயல்நாடு செல்லும் வாய்ப்பு வரும். நவீன ரக வாகனம் வாங்குவீங்க.

வெளியூர் பயணங்களில் கவனமுடன் சென்று வருவது நல்லது. ஓரளவு பணவரவு உண்டு. முன்னேற்றம் தடைப்படாது.

உத்தியோகத்தில் புதிய உற்சாகம் பிறக்கும். உங்களோட தனித்தன்மை வெளிப்படும். அதிகாரிகளுடன் அரவணைத்துப் போகும் மனப்பக்குவம் உண்டாகும்.

பெண்கள் கூடுதலாக ஒரு புதிய மொழியைக் கற்றுக் கொள்வாங்க. புதிய இடத்தில் வேலை கிடைக்கும். உயர்கல்வி, மேற்படிப்பு தொடர விரும்புபவர்களுக்கு எதிர்பார்த்த கல்வி நிறுவனத்தில் சேர கடிதம் வரும். கல்யாணப் பேச்சுவார்த்தைகள் சுமுகமாக முடியும்

மகம் (சிம்மம்):

உங்களோட ராசிக்கு 5 – ம் வீட்டில் அமர்ந்து உங்களோட வருங்கால திட்டங்களை நிறைவேற்றிய குரு பகவான் , இனி ராசிக்கு 6 – ம் வீட்டில் மறைகிறார். குரு சங்கடங்கள் தருவாரோ என கலங்கவேண்டாம். இவர் நீசபங்கம் பெறவிருப்பதால் நல்லதே நடக்கும்.

அவர் உங்கள், ராசிக்கு 2,10,12 ஆகிய வீடுகளைப் பார்க்கவிருக்கிறார்.
வாழ்க்கையின் சூட்சுமங்களைக் கற்றுக் கொள்வீங்க. மற்றவர்களை நம்பி இருக்காமல் தன் முயற்சியால் என்ன முடிகிறதோ அதைச் செய்து முன்னேறுவீங்க. எவ்வளவு பணம் வந்தாலும் சேமிக்க முடியாதபடி செலவுகள் இருக்கும்.

முன்கோபத்தால் நல்லவர்களின் நட்பை இழக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

குரு பகவான் குடும்ப ஸ்தானத்தைப் பார்ப்பதால் பழைய நகையை மாற்றி புது டிசைனில் ஆபரணம் வாங்குவீங்க. வாகனத்தைச் சீர் செய்வீங்க.

திட்டமிட்ட காரியங்கள் கைகூடும். புதிய முதலீடுகள் செய்து சொந்தமாகத் தொழில் தொடங்குவீங்க. அயல்நாட்டிலிருக்கும் உறவினர், நண்பர்களால் ஆதாயமடைவீங்க.

தாயாரின் உடல்நிலை சீராகும். தாய்வழிச் சொத்துகள் கைக்கு வரும். புகழ் பெற்றவர்கள் நண்பர்களாவாங்க. மூத்த சகோதர வகையில் ஆதரவுப் பெருகும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். திருமணம், சீமந்தம் போன்ற சுபநிகழ்ச்சிகளாலும், விருந்தினர்களின் வருகையாலும் வீடு களைகட்டும்.

எதிர்பார்த்த வகையில் பணவரவு உண்டு. இங்கிதமாகப் பேசி முக்கிய காரியங்களை முடிப்பீங்க.

வீண் அலைச்சல், தர்ம சங்கடமான சூழ்நிலைகள் ஆகியவை முடிவுக்கு வந்து நிம்மதியான நிலை உருவாகும்.  அலுவலகத்தில் சற்றே முன்னெச்சரிக்கையாயிருப்பது நல்லது.

பூரம் (சிம்மம்):

உங்களோட ராசிக்கு 5 – ம் வீட்டில் அமர்ந்து உங்களோட வருங்கால திட்டங்களை நிறைவேற்றிய குரு பகவான் , இனி ராசிக்கு 6 – ம் வீட்டில் மறைகிறார். குரு சங்கடங்கள் தருவாரோ என கலங்கவேண்டாம். இவர் நீசபங்கம் பெறவிருப்பதால் நல்லதே நடக்கும்

அவர் உங்கள், ராசிக்கு 2,10,12 ஆகிய வீடுகளைப் பார்க்கவிருக்கிறார்.

பணவரவு உண்டு. குடும்பத்தில் நிம்மதி உண்டு. அடுத்தடுத்து சுபநிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். பெரிய மனிதர்களின் நட்பு கிடைக்கும்.

குரு பகவான் குடும்ப ஸ்தானத்தைப் பார்ப்பதால் மகளுக்குத் திருமணம் நிச்சயமாகும். மகனின் அலட்சியப் போக்கு மாறும்

குரு 10 – ம் வீட்டைப் பார்ப்பதால் புதிய இடத்தில் வேலை கிடைக்கும். தன்னம்பிக்கையுடன் பொது காரியங்களில் ஈடுபடுவீங்க. கடினமான வேலைகளையும் எளிதாக முடிக்கும் சக்தி கிடைக்கும். பழைய சிக்கலில் ஒன்று தீரும்.

உங்களுடைய திறமைகள் வெளிப்படும். தள்ளிப்போன அரசு வகை காரியங்கள் விரைந்து முடியும். நட்புவட்டம் விரிவடையும்.

வியாபாரத்தில் அதிரடி மாற்றங்கள் செய்து லாபம் ஈட்டுவீங்க. வேலையாட்கள் முரண்டு பிடிப்பார்கள். தொழில் போட்டிகள் அதிகமாகும். பழைய நிறுவனங்களைக் காட்டிலும் புதிய நிறுவனங்களின் பொருட்களை விற்பதன் மூலமாக அதிக ஆதாயமடைவீங்க. சிமெண்ட், கணினி உதிரி பாகங்கள், ரியல் எஸ்டேட் வகைகளால் லாபமடைவீங்க.

வேலைச்சுமை குறைந்து வருமானம் அதிகரிக்கும். தாமதப்பட்டு வந்த பதவி உயர்வு உடனே கிடைக்கும். தற்போது வேலைபார்க்கும் இடத்திலேயே நற்செய்திகள் கிடைக்கும் என்பதால் புது உத்தியோக வாய்ப்புகள் வந்தாலும் பொறுத்திருந்து செயல்படுவது நல்லது.

உத்திரம்,1(சிம்மம்):

உங்களோட ராசிக்கு 5 – ம் வீட்டில் அமர்ந்து உங்களோட வருங்கால திட்டங்களை நிறைவேற்றிய குரு பகவான் , இனி ராசிக்கு 6 – ம் வீட்டில் மறைகிறார். குரு சங்கடங்கள் தருவாரோ என கலங்கவேண்டாம். இவர் நீசபங்கம் பெறவிருப்பதால் நல்லதே நடக்கும்

அவர் உங்கள், ராசிக்கு 2,10,12 ஆகிய வீடுகளைப் பார்க்கவிருக்கிறார்.

கணவன் மனைவி பரஸ்பரம் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. சிலர் பூர்வீக சொத்தை விற்றுவிட்டு நகரத்தை ஒட்டியுள்ள புறநகர் பகுதியில் குடியேறுவாங்க. புது வாகனம் வாங்குவீங்க. உதவி செய்கிறேன் என்று சொல்லியிருந்தவர்கள் உங்களுக்கு உதவாமல் போகச் சிறிதளவு வாய்ப்புள்ளது. எனவே எதற்கும்.. மாற்றுவழியை யோசித்து வையுங்கள்.

குரு 12 – ம் வீட்டைப் பார்ப்பதால் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னின்று நடத்துவீங்க. சுபசெலவுகள் அதிகரிக்கும். வெளியூர் பயணங்களால் புத்துணர்ச்சி பெறுவீங்க. நீண்ட நாள்களாகப் போக நினைத்த புண்ணியஸ்தலங்களுக்குச் சென்று வருவீங்க.

அரசாங்கத்தாலும், அதிகாரப் பதவியில் இருப்பவர்களாலும் ஆதாயம் உண்டு. வீடு கட்ட அரசாங்க அனுமதி கிடைக்கும். பொது விழாக்கள், சுபநிகழ்ச்சிகளில் முதல் மரியாதை கிடைக்கும்.

அரசாங்கத்தாலும், அதிகாரப் பதவியில் இருப்பவர்களாலும் ஆதாயம் உண்டு. வீடு கட்ட அரசாங்க அனுமதி கிடைக்கும். பொது விழாக்கள், சுபநிகழ்ச்சிகளில் முதல் மரியாதை கிடைக்கும்.

பெண்கள் உயர் கல்வியில் சாதிப்பார்கள். பழைய நண்பர்கள் தேடி வந்து பேசுவாங்க. பெற்றோருடன் இருந்து வந்த கருத்துமோதல் நீங்கும். வெளிமாநிலத்தில் வேலை கிடைக்கும்.

உத்திரம்,2,3,4(கன்னி):

உங்களோட ராசிக்கு சுகஸ்தானமான 4 – ம் வீட்டில் அமர்ந்து கொண்டு வீண் விரயத்தையும், ஏமாற்றங்களையும் தந்த குரு பகவான் இனிமேல் ராசிக்கு 5 – ம் வீட்டில் அமர்ந்து நீசபங்கம் பெறவிருப்பதால் நீங்கள் புதிய பாதையில் பயணிப்பீங்க.

அவர் உங்கள் ராசியையும், ராசிக்கு 9,11 ஆகிய வீடுகளையும் பார்க்கவிருக்கிறார்.

குழந்தை இல்லாதவர்களுக்குக் குழந்தை பாக்கியம் உண்டாகும். பூர்வீக சொத்தில் உங்களோட பங்கு கைக்கு வரும். தாய்வழி உறவினர்கள் உங்களைப் புரிந்துகொள்வாங்க. சொந்தமாக இடம் வாங்கும் யோகம் உண்டாகும். குலதெய்வக் கோயிலுக்குச் செய்யவேண்டிய நேர்த்திக்கடனை இப்போது நிறைவேற்றுவீங்க.

உங்களோட இலக்கை நோக்கி முன்னேறுவீங்க. பாகப்பிரிவினை சுமுகமாக முடியும். கோயில் கும்பாபிஷேகத்தைத் தலைமையேற்று நடத்துவீங்க. சொந்த ஊரில் இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீங்க. பதினோறாம் வீட்டை குரு பார்ப்பதால் உங்களோட புகழ், கௌரவம் கூடும். புதிய பதவிக்கு உங்களோட பெயர் பரிந்துரை செய்யப்படும்.

வேலைச்சுமை அதிகரிக்கும். குடும்பத்தினரைப் பற்றி யாரிடமும் குறைத்துப் பேச வேண்டாம். மகம், உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு முயற்சிகள் பலிதமாகும்.

உடல்நலனில் கவனமாக இருப்பது நல்லது. அரசு வகை காரியங்களில் கவனமாக இருங்கள்.

வியாபாரத்தில் இரட்டிப்பு லாபம் உண்டு. இங்கிதமாகவும், இதமாகவும் பேசி வாடிக்கையாளர்களைக் கவருவீங்க. சிலர் புது தொழில் அல்லது புது கிளைகள் தொடங்குவீங்க.

ஹஸ்தம் (கன்னி):

உங்களோட ராசிக்கு சுகஸ்தானமான 4 – ம் வீட்டில் அமர்ந்து கொண்டு வீண் விரயத்தையும், ஏமாற்றங்களையும் தந்த குரு பகவான் இனிமேல் ராசிக்கு 5 – ம் வீட்டில் அமர்ந்து நீசபங்கம் பெறவிருப்பதால் நீங்கள் புதிய பாதையில் பயணிப்பீங்க.

அவர் உங்கள் ராசியையும், ராசிக்கு 9,11 ஆகிய வீடுகளையும் பார்க்கவிருக்கிறார்.

வாழ்வில் எதிர்பாராத அதிரடி மாற்றங்கள் உண்டாகும். குடும்பத்தின் அடிப்படை வசதி, வாய்ப்புகள் உயரும். கல்யாணம், காது குத்து நிகழ்ச்சி என வீடு களைகட்டும். கணவன், மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். மகளின் திருமணத்தை கோலாகலமாக நடத்துவீங்க. மகனுக்கும் நல்ல இடத்தில் மணப்பெண் அமையும்.

உணர்ச்சிவசப்படாமல் செயல்படுவது நல்லது. எதிர்மறை எண்ணங்களுக்கு இடம் கொடுக்காதீங்க.

எதிர்ப்புகள் அதிகமாகும். பழைய கடனை அடைக்க புதிய வழி பிறக்கும்.

அரசால் அனுகூலம் உண்டு. நீண்ட நாளாக எதிர்பார்த்துக் காத்திருந்த அயல்நாட்டுப் பயணம் சாதகமாக அமையும். வீடு கட்ட ப்ளான் அப்ரூவலாகும். கோயில் விசேஷங்களை முன்னின்று நடத்துவீங்க. வெளிவட்டாரத்தில் செல்வாக்கு உயரும். அதிகாரிகளின் நட்பு கிடைக்கும்.

பெண்கள் உயர்கல்வியில் வெற்றிபெறுவாங்க. தோஷங்களால் தடைப்பட்ட கல்யாணம் நல்லவிதத்தில் முடியும். நினைத்ததைச் சாதிப்பீங்க. எதிர்பார்த்த நிறுவனத்தில் அதிக சம்பளத்துடன் புதிய வேலை அமையும்.

இந்த குரு மாற்றம் தொட்டதெல்லாம் துலங்க வைப்பதுடன், எதிர்பாராத திடீர் யோகங்களையும் அள்ளித்தரும்.

சித்திரை, 1,2 (கன்னி):

உங்களோட ராசிக்கு சுகஸ்தானமான 4 – ம் வீட்டில் அமர்ந்து கொண்டு வீண் விரயத்தையும், ஏமாற்றங்களையும் தந்த குரு பகவான் இனிமேல் ராசிக்கு 5 – ம் வீட்டில் அமர்ந்து நீசபங்கம் பெறவிருப்பதால் நீங்கள் புதிய பாதையில் பயணிப்பீங்க.

அவர் உங்கள் ராசியையும், ராசிக்கு 9,11 ஆகிய வீடுகளையும் பார்க்கவிருக்கிறார்.

வேலைக்கு விண்ணப்பித்துக் காத்திருந்தவர்களுக்கு நல்ல நிறுவனத்திலிருந்து அழைப்பு வரும். மனைவிவழி உறவினர்கள் மதிப்பார்கள். அதிக வட்டிக்கு வாங்கியிருந்த கடனைத் தந்து முடிப்பீங்க. நட்புவட்டத்தால் பலனடைவீங்க.

பொது விழாக்கள், சுப நிகழ்ச்சிகளில் முதல் மரியாதை கிடைக்கும்.

பிரபலங்களின் உதவியுடன் தள்ளிப்போன காரியங்களை விரைந்து முடிப்பீங்க. இல்லத்தில் திருமணம் கூடி வரும். வாகனத்தைச் சீர்செய்வீங்க. அழகு, ஆரோக்கியம் கூடும்.

மெடிக்கல், வாகனம், கல்விக் கூடங்கள், கமிஷன் வகைகளால் லாபமடைவீங்க. உங்களோட ரசனைக்கேற்ப கடையை விரிவுபடுத்துவீங்க. சிலர் சொந்த இடத்துக்கு மாற்றுவீங்க.

மாணவ மாணவிகளின் நினைவாற்றல், அறிவாற்றல் கூடும். அனைத்துப் பாடங்களிலும் அதிக மதிப்பெண்கள் குவிப்பார்கள். ஆசிரியர்கள் பக்கபலமாக இருப்பார்கள். உயர்கல்வியில் வெற்றியுண்டு. விரும்பிய படிப்பில் சேருவீங்க.

கலைத்துறையினர் புகழடைவாங்க. சிலருக்கு விருது கிடைக்கும். உதாசினப் படுத்திய நிறுவனமே உங்களை அழைத்துப் பேசும். சம்பள பாக்கி கைக்கு வரும். உங்களோட படைப்புத் திறன் அதிகரிக்கும்.

– நாளை துலாம், விருச்சிகம், தனுசு ராசிகளுக்கான பலன்கள் வெளியாகும்…