தராபாத்

ஜி எஸ் டி கவுன்சில் கூட்டம் நாளை ஐதராபாத் நகரில் நடைபெற உள்ளது.

ஜி எஸ் டி கவுன்சிலின் 21 ஆவது கூட்டம் நாளை ஐதராபாத்தில் நடைபெற உள்ளது.  மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் அனைத்து மாநில நிதி அமைச்சர்களும் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப் படுகிறது.  இக்கூட்டத்தில் தெலுங்கானா மாநில நிதி அமைச்சர் எடேலா ராஜேந்தர் முக்கிய உரை ஆற்றுவார்.

ஜி எஸ் டி கவுன்சில் சென்ற ஆண்டு செப்டம்பர் மாதம் 21ஆம் தேதி அன்று அமைக்கப்பட்டது.   இந்தக் கூட்டம் அந்த கவுன்சிலின் 21 ஆவது கூட்டம் ஆகும்.  ஜூலை மாதம் ஒன்றாம் தேதி ஜி எஸ் டி நாடெங்கும் அமுலாக்கப்பட்டது தெரிந்ததே. இந்தக் கூட்டம் அதன் பின் நடக்கும் 3ஆவது கூட்டம் ஆகும்.