பிரெஞ்ச் கயானா:
சிறப்பான தகவல் தொடர்பு மற்றும் பல நவீன வசதிகளை மேம்படுத்த உதவும் இந்தியாவின் ஜி-சாட் 18 செயற்கைக்‍கோள், பிரெஞ்ச் கயானாவில் இருந்து இருந்து இன்று அதிகாலை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.
isro-satellite-ap-big75
தகவல் தொடர்பு சேவைக்‍காக இந்தியா விண்ணில் ஏவியுள்ள 14 செயற்கைக்‍கோள்கள் தற்போது பயன்பாட்டில் இருக்கின்றன. இந்த நிலையில்,தகவல் தொடர்பு சேவையை மேலும் சிறப்பாக உருவாக்கும்  வகையில், இந்திய விஞ்ஞானிகள்  ஜிசாட்-18 என்னும் செயற்கைக்‍கோளை உருவாக்கினர்.  இது இன்று அதிகாலை பிரெஞ்ச் கயானாவில் உள்ள ஏவுதளத்தில் இருந்து Ariane-5 VA-231 என்ற ராக்கெட் t மூலம் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.
3 ஆயிரத்து 404 கிலோ எடையுள்ள இந்த செயற்கைக்‍கோளில், 48 தொலைத்தொடர்பு சாதனங்கள் பொருத்தப்பட்டு உள்ளன. மிகவும்  துல்லியமான தகவல் தொடர்பு, ராணுவ சேவை மற்றும் தொலைக்‍காட்சி ஒளிபரப்பு ஆகியவற்றுக்கு  இந்த ஜிசாட்-18 செயற்கைக்‍கோள் மிகவும் உதவியாக இருக்‍கும்.  15 வருடங்கள்  விண்ணில் இந்த செயற்கைக்கோள் பயன்பாட்டில் இருக்கும் என்று இந்திய விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர்.
முன்னதாக, வானில் மேகமூட்டங்கள் அதிகமாக காணப்பட்டதால், ஜி-சாட் 18 செயற்கைகோள் விண்ணில் ஏவப்படுவது ஒத்திவைக்‍கப்பட்டு, பிறகு வெற்றிகரமாக ஏவப்பட்டது.