சென்னை,

மிழ்நாடு பணியாளர் தேர்வாணையம் மூலம் நடத்தப்படும் குரூப் 2ஏ தேர்வுக்கான கலந்தாய்வு தேதி விவரத்தை டிஎன்பிஎஸ்சி அறிவித்து உள்ளது.

சென்னை: குரூப் 2ஏ தேர்வுக்கான 2ம் கட்ட கலந்தாய்வு மே 15ம் தேதி முதல் 17ம் தேதி வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கலந்தாய்வில் பங்கேற்கும் விண்ணப்பதாரர்களின் பட்டியல் www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வுக்கு அழைக்கப்படும் விண்ணப்பதாரர்களின் தரவரிசை அடங்கிய தாற்காலிகப் பட்டியல் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

இதில், கலந்து கொள்வதற்காக அழைக்கப்பட்டவர்கள் மதிப்பெண்கள், தரவரிசை, அவர்களின் இடஒதுக்கீட்டு பிரிவு, விண்ணப்பத்தில் அளித்துள்ள தகவல்கள் மற்றும் நிலவும் காலிப்பணி யிடங்களுக்கு ஏற்ப அனுமதிக்கப்படுவர்.

விண்ணப்பதாரர்கள் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்விற்கு வரத் தவறினால் அவர்களுக்கு மறுவாய்ப்பு அளிக்கப்படமாட்டாது என்று டி.என்.பி.எஸ்.சி.,தெரிவித்துள்ளது.