பம்பை
சபரிமலை பக்தர்களுடன் பம்பையில் இருந்து நிலக்கல் சென்ற பேருந்து திடீரென தீ பிடித்து எரிந்துள்ளது.

நவம்பர் 15 ஆம் தேதி முதல் 25 ஆம் தேதி வரை சபரிமலை அய்யப்பன் கோவிலில் மண்டல பூஜையும், மகரவிளக்கு ஜோதி திருவிழா டிசம்பர் 30-ந்தேதி முதல் 2025 ஜனவரி 19-ந்தேதி வரையும் நடைபெறுகிறது. இந்த ஆண்டு மண்டல, மகர விளக்கு சீசனுக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை நேற்று முன்தினம் மாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது.
லட்சக்கணக்கான பக்தர்கள் அய்யப்பனை தரிசனம் செய்வதற்காக வந்தவண்ணம் உள்ள நிலையில் பக்தர்களின் வாகனம் நிலக்கல்லில் நிறுத்தி வைக்கப்பட்டு அங்கிருந்து அரசு பேருந்து மூலம் பம்பை சென்று அங்கிருந்து சபரிமலை செல்வர். அதன்படி அரசு பேருந்து ஒன்று பம்பையில் பக்தர்களை இறக்கிவிட்டு, மீண்டும் அங்கிருந்து நிலக்கல் திரும்பும் பக்தர்களை ஏற்றிக் கொண்டு வந்து கொண்டிருந்தது.
அந்த பேருந்தில் திடீரென மின்கசிவு ஏற்பட்டு தீப்பிடித்ததால் பேருந்தில் இருந்த பக்தர்கள் அனைவரும் உடனடியாக இறக்கிவிடப்பட்டனர். தகவல் அறிந்த தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து \ தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். ஆயினும் விபத்தில் பேருந்து முழுமையாக எரிந்து நாசமானது.
[youtube-feed feed=1]