புதுச்சேரி:
புதுச்சேரி துணை நிலை ஆளுநர் அலுவக நிர்வாகம் சீரமைக்கப்பட்டு, மக்கள் சேவைக்காக எளிமைப்படுத்தப்பட்டு சிக்கன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக புதுச்சேரி துணை நிலை ஆளுநர் மாளிகை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து புதுச்சேரி துணை நிலை ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள அறிவிப்பில், புதுச்சேரி துணை நிலை ஆளுநர் மாளிகையில் மேற்பார்வையாளராக இருந்து வந்த ஆஷா குப்தா, செய்தி தொடர்பாளராக பணியாற்றிய குமரன், குறைகேட்கும் அதிகாரியாக பணியாற்றிய பாஸ்கரன் ஆகியோர் மாற்றப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், மக்களிடம் இருந்து பெறப்படும் கோரிக்கைகளை பரிசீலனை செய்வதற்கு குழு அமைக்கப்பட்டு நடவடிக்கை எடுப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.