டெல்லி: 2019-20ம் நிதியாண்டு தனிநபர் வருமான வரித் தாக்கல் செய்ய ஜனவரி 10ம் தேதி வரை அவகாசம் நீட்டிப்பட்டுள்ளது.

இதற்காக அறிவிப்பை மத்திய நிதித் துறை அமைச்சகம் வெளியிட்டு உள்ளது. டிசம்பர் 31ம் தேதியுடன் நிறைவடைய இருந்த காலக்கெடு தற்போது 3வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது.

நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களுக்கான கணக்குளை தணிக்கை செய்ய ஜனவரி 31 வரை மட்டுமே அவகாசம் வழங்கப்பட்டிருந்தது. ஆனால் இது 15 நாள்கள் நீட்டிக்கப்பட்டு பிப்ரவரி 15ம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டு உள்ளது.

முன்னதாக கொரோனா தொற்று எதிரொலியாக வருமான வரித் தாக்கல் செய்ய அவகாசம் நீட்டிக்கப்பட்டு வந்தது. இப்போது 3வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது.