சென்னை

மிழக அரசு கோவில் நிலங்களை அபகரித்தவர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிய வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த மாதம் சென்னை மயிலாப்பூர் ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் பேயாழ்வார் கோவில் தேவஸ்தானத்தில் 5 அறங்காவலர்கள் அறநிலையத் துறையால் பதவி நீக்கம் செய்யப்பட்டனர்.  இவர்களில் ஆடிட்டர் ஸ்ரீதரன் என்பவரும் ஒருவர் ஆவார்.  இந்த பதவி நீக்கத்தினை எதிர்த்து அவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

நீதிபதி எஸ் எம் சுப்பிரமணியம் இந்த வழக்கை விசாரித்து வருகிறார்.  அவர் நேற்று பிறப்பித்த உத்தரவில், ”அறநிலையத்துறையால்  அறங்காவலர்களுக்கு எதிராகப் பிறப்பிக்கப்பட்ட குற்ற குறிப்பானைச் செல்லும்.   ஆயினும்  மனுதாரருக்கு எதிரான தற்காலிகப் பதவி நீக்க உத்தரவு ரத்து செய்யப்படுகிறது.  மீதமுள்ளோருக்குப் பிறப்பிக்கப்பட்ட உத்தரவுக்கு ஏற்கனவே இடைக்காலத் தடை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கோவில் நிலத்தை யாரேனும் சட்டவிரோதமாக அபகரித்திருந்தால் அவர்கள் தாமாக முன்வந்து அந்த நிலங்களை அறநிலையத் துறையிடம் ஒப்படைக்க வேண்டும். தவறினால் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என பத்திரிகைகளில் விளம்பரம் வெளியிட வேண்டும். அரசு கோயில் நிலங்களை அபகரிப்பவர்கள், அபகரித்தவர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தைப் பயன்படுத்தி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கோவில் நிலம், சொத்து, நகைகளை மீட்கும் நடவடிக்கைகளைக் கண்காணிக்கச் சிறப்புப் பிரிவை ஏற்படுத்த வேண்டும். அந்த சிறப்புப் பிரிவின் தொலைப்பேசி எண், அலைப்பேசி எண்களை அனைத்து கோயில்கள்,அறநிலையத் துறை அலுவலகங்களில் பக்தர்கள் புகார் அளிக்கும் வகையில் தெரியப்படுத்த வேண்டும்”  எனத் தெரிவித்துள்ளார்.