பனாஜி:

கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் மீண்டும் சிகிச்சைக்காக மும்பை சென்றார்.

கோவா முதல்-வர் மனோகர் பாரிக்கர் உடல்நலக்குறைவால் கடந்த மாதம் 15-ம் தேதி கோவா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சை அளிக்க மும்பையில் உள்ள லீலாவதி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. உடல் நலம் குணமடைந்ததை தொடர்ந்து கடந்த 22-ம் தேதி கோவா வந்து மாநில பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.

பின்னர் 25-ம் தேதி மீண்டும் குறைந்த ரத்த அழுத்தம் ஏற்பட்டது. இதனால் கோவா மருத்துவமனையில் மனோகர் சேர்க்கப்பட்டு 1-ம் தேதி வீடு திரும்பினார். தொடர்ந்து வீட்டில் ஓய்வு எடுத்து வந்தார்.

இந்நிலையில், மருத்துவ பரிசோதனைக்காக இன்று மதியம் மனோகர் பாரிக்கர் மும்பை சென்றார். தேவைப்பட்டால் டாக்டர்கள் பரிந்துரை படி மேல் சிகிச்சைக்காக மனோகர் பாரிக்கர் வெளிநாட்டுக்கு அழைத்துச் செல்லப்படலாம் என்றும் ªதிரவிக்கப்பட்டுள்ளது. தற்போது 3 மூத்த அமைச்சர்கள் கொண்ட குழு மாநில அரசின் நிர்வாகத்தை செயல்படுத்த நியமனம் செய்யப்பட்டுள்ளது.