காஷ்மீர்:
காஷ்மீர் முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவருமான குலாம் நபி ஆசாத்திற்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

இது குறித்து டுவிட்டரில் அவர் தெரிவித்துள்ளதாவது:
எனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நான் தனிமைப்படுத்தி உள்ளேன். என்னுடன் கடந்த சில தினங்களாக தொடர்பில் இருந்தவர்கள் பரிசோதனை செய்துகொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன் என பதிவிட்டுள்ளார்.