சென்னை:

ள்ளாட்சி தேர்தல் வர இருப்பதால், வாக்குச்சாவடிகள் நடக்கும் இடங்களை கணக்கெடுத்து தயார் நிலையில் வைக்கும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

கடந்த வருடம் அக்., 17, 19 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக, தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடக்க இருந்தது. இதை எதிர்த்து, தி.மு.க., தாக்கல் செய்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், தேர்தலை ரத்து செய்து உத்தரவிட்டது.

தற்போது, ‘மே 14க்குள் உள்ளாட்சி தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும்’ என, உயர் நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

இதையடுத்து, கடந்த ஜன., 5ல் மத்திய தேர்தல் கமிஷன் வெளியிட்ட, இறுதி வாக்காளர் பட்டியலின் நகல் பெற்று, பணிகள் துவங்கப்பட்டுள்ளன.

அடுத்த கட்டமாக, ஓட்டுச்சாவடிகளை தயார்படுத்துதல், உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ளும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இது குறித்து அதிகாரிகள் வட்டாரத்தில் தெரிவித்துள்ளதாவது:

“புறநகர் பகுதியில், 1,200 வாக்காளர்களுக்கு ஒரு ஓட்டுச்சாவடி, நகர் பகுதியில், 1,400 வாக்காளர்களுக்கு ஒரு ஓட்டுச்சாவடி வீதம் இருக்கும்.  புதிதாக வாக்காளர் சேர்ப்பு, நீக்கம் என, இரண்டும் இருக்கிறது. ஆகவே வாக்குச்சாவடிகளின்  எண்ணிக்கை அதிகரிக்கலாம் அல்லது குறையலாம். வார்டு வாரியாக  வாக்காளர் பட்டியல் தயாரித்து முடித்ததும், தேவையான ஓட்டுச்சாவடிகள் இறுதி செய்யப்படும்” என்று கூறப்படுகிறது.