மகாத்மா காந்தியின் பேரனும் எழுத்தாளரும் பத்திரிகையாளருமான அருண் காந்தி காலமானார்.

காந்தியின் இரண்டாவது மகன் மணிலால் காந்தி மற்றும் சுசீலா ஆகியோரின் மகனான அருண் காந்தி செவ்வாயன்று காலை காலமானார் அவருக்கு வயது 89.

அருண் காந்தியின் இறுதிச் சடங்குகள் இன்று மாலை மகாராஷ்டிரா மாநிலம் கோலாப்பூரில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

89 வயதான அவருக்கு மகன் துஷார், மகள் அர்ச்சனா, நான்கு பேரக்குழந்தைகள் மற்றும் ஐந்து கொள்ளு பேரக்குழந்தைகள் உள்ளனர்.

பெத்தானி ஹெகெடஸுடன் இணைந்து ‘கஸ்தூரிபா, மறக்கப்பட்ட பெண்’, ‘தாத்தா காந்தி’ போன்ற புத்தகங்களை எழுதினார் மற்றும் இவான் துர்க்கால் விளக்கப்பட்டது, ‘கோபத்தின் பரிசு: மற்றும் என் தாத்தா மகாத்மா காந்தியிடமிருந்து மற்ற பாடங்கள்’ போன்ற புத்தங்கங்களையும் எழுதியுள்ளார்.