டெல்லி: எரிபொருட்கள் விலை உயர்வுக்கு போர்தான் காரணம் என்று கூறிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், விவாதத்தின்போது, மறைந்த முன்னாள் பிரதமர் நேருவின் கூற்றையும் சுட்டிக்காட்டி பேசினார்.

மத்திய பாஜக ஆரசு, 5 மாநில சட்டமன்ற தேர்தல் காரணமாக கடந்த  மூன்று மாதங்களுக்கு மேலாக  எரிபொருட்களின் விலையை உயர்த்த்தாமல் இருந்து வந்த நிலையில், தேர்தல் வெற்றிக்கு பிறகு மீண்டும் விலையை உயர்த்தி இருப்பது கடுமையான விமர்சங்களை ஏற்படுத்தி உள்ளது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்த போதிலும் நாட்டில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை 4 நவம்பர் 2021 முதல் மார்ச் 21, 2022 வரை நிறுத்தப்பட்டது. ஆனால், கடந்த ஒரு வாரத்தில் பெட்ரோல் விற்பனையாளர்கள் நாடு முழுவதும் ரூ.2.40 ஆக உயர்ந்துள்ளது.

பெட்ரோல், டீசல், சமையல் கேஸ் வலை உயர்வை ரத்து செய்ய வேண்டும் என பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள்  போர்க்கொடி தூக்கி உள்ளனர்.

இந்த நிலையில், நிதி மசோதாவுக்கு பதில் அளித்து பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், எரிபொருள் விலை உயர்வு 5 மாநில தேர்தல் முடிவுகளால் அல்ல என்று கூறியதுடன், ரஷ்யா – உக்ரைன் இடையே ஏற்பட்டுள்ள மோதலே எரிபொருள் விலை உயர்வுக்கு காரணம், குறிப்பாக கச்சா எண்ணெய் விநியோகச் சங்கிலிகள் சீர்குலைந்துள்ளதால் எரிபொருள் விலை உயர்வு தவிர்க்க முடியாதது என்று கூறினார்.

எரிபொருள் விலை உயர்வு தொடர்பாக எதிர்க்கட்சிகளின் தாக்குதலுக்கு பதிலளித்து பேசிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், நாட்டின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவை சுட்டிக்காட்டி உரையாற்றினார். அப்போது,  சீதாராமன் 1950களில் நேரு ஆற்றிய உரையை இந்தியில் படித்தார், அங்கு முன்னாள் பிரதமர் கொரியப் போரை நாட்டில் பணவீக்கத்திற்கு குற்றம் சாட்டியிருந்தார். 1950களில் கொரியாவில் நடந்த போரை விலைவாசி உயர்வுக்கு நேரு குற்றம் சாட்டினால், ரஷ்யா-உக்ரைன் போர் ஏன் இன்று விலையை பாதிக்காது என்று வாதிட்டார்.

தொடர்ந்து பேசியவர், எவ்வாறாயினும், எரிபொருள் விலையை அதிகரிப்பதில் அரசாங்கத்திற்கு எந்தப் பங்கும் இல்லை என்றும், விலை உயர்வை எண்ணெய் சந்தைப்படுத்தும் நிறுவனங்களே முடிவு செய்கின்றன என்றவர், OMCகள் அவற்றின் 15 நாள் சராசரி விலையின் அடிப்படையில் எரிபொருள் விலையை முடிவு செய்வதாக கூறினார்.

மத்திய பாஜகஅரசு,  சாமானியர்கள் மீதான வரிச்சுமையை அதிகரிக்கிறது என்ற எதிர்க்கட்சியின் குற்றச்சாட்டை மறுத்து பேசியவர், 1970-ல் இந்திரா காந்தி அரசாங்கம் தான் விளிம்புநிலை வருமான வரி விகிதத்தை 93.5% ஆக உயர்த்தியது என்று காங்கிரஸை விமர்சித்தார்.

கிரிப்டோகரன்சி குறித்து எதிர்க்கட்சியினரின் விமர்சனத்துக்கு பதில் அளித்தவர், அரசாங்கம் அதை ஒழுங்குபடுத்த விரும்புகிறதா அல்லது தடை செய்ய விரும்புகிறதா என்பது விவாதத்தில் உள்ளது. ஆலோசனை முடிந்ததும் அரசு தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்தும்.

இவ்வாறு கூறினார்.