சென்னை

நாளை முதல் தமிழகத்தில் இருந்து திருப்பதிக்குச் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

இன்று சென்னை மாநகர் போக்குவரத்துக் கழகம் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது அ

அந்த அறிவிப்பில்,

“இந்த வருடம் 2023-ல் திருப்பதி திருமலையில் இரண்டாவது முறையாக நடைபெறவுள்ள பிரம்மோற்சவம் திருவிழாவினை முன்னிட்டு பக்தர்கள் வசதிக்காகத் தமிழக அரசுப் போக்குவரத்துக் கழகம் சென்னை, திருச்சி, தஞ்சாவூர், சேலம், கோயம்புத்தூர், மதுரை, காரைக்குடி, கும்பகோணம் மற்றும் புதுச்சேரி ஆகிய இடங்களிலிருந்து திருப்பதிக்கு வரும் 13-10-2023 முதல் 28-10-2023 வரை சிறப்புப் பேருந்துகள் இயக்க உள்ளது. 

மேற்கூறியஇடங்களிலிருந்து இயக்கப்படும் பேருந்துகளுக்கு முன்பதிவு வசதியும் செய்யப்பட்டுள்ளது. இந்த சேவையைப் பக்தர்கள் முழுமையாகப் பயன்படுத்தி பயணம் மேற்கொள்ள www.tnstc.in – tnstc official  app மூலம் முன்பதிவு செய்து பயன்பெறுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.”

என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.