டில்லி,
வீட்டு தேவைக்கு உபயோகப்படுத்தும்  சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.37.50 நேற்று நள்ளிரவு முதல் உயர்த்தப்பட்டு உள்ளது. இன்று முதல் அமலுக்கு வருகிறது.
அதேபோல் பெட்ரோல், டீசல் விலையும் உயர்த்தப்பட்டு உள்ளது.
%e0%ae%89%e0%ae%b2%e0%ae%9f%e2%97%8c%e0%af%88%e0%ae%a9%e0%af%87%e0%ae%a8%e0%ae%9a
வீட்டு உபயோகத்துக்கான மானியம் அல்லாத சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை செவ்வாய்க்கிழமை (நவ.1) முதல் ரூ.37.50 உயர்த்தப்பட்டுள்ளது.
வீட்டு உபயோகத்துக்கான மானியம் அல்லாத சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை  அக்டோபர் 28-ஆம் தேதியன்று ரூ.2 உயர்த்தப்பட்டு ரூ.501-ஆக நிர்ணயிக்கப்பட்டது.  தற்போது மீண்டும் ரூ.37.50 உயர்த்தப்பட்டு, செவ்வாய்க்கிழமை முதல் வீட்டு சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.538.50-ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மானியம் கொண்ட சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.418.14-ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளதால், வங்கிக் கணக்கு இணைப்புடன் கூடிய வீட்டு சமையல் எரிவாயு (மானியம் அல்லாத) நுகர்வோருக்கு அவர்களது கணக்கில் ரூ.120.36 சேர்க்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
அதேபோல் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.1,34 பைசாவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.2,37 பைசாவும் அதிகரித்து உள்ளது.