டில்லி
இன்று முதல் நாடெங்கும் மீண்டும் உள்நாட்டு விமானச் சேவை தொடங்கி உள்ளது.
கொரோனா பாதிப்பைக் குறைக்க வெளிநாட்டு விமானச் சேவை நிறுத்தப்பட்டது.
அதன் பிறகு ஊரடங்கு காரணமாக உள்நாட்டு விமானச் சேவையும் நிறுத்தப்பட்டது.
தற்போதைய நான்காம் கட்ட ஊரடங்கில் விதிகள் தளர்த்தப்பட்டு வருகின்றன.
அவ்வகையில் நாடெங்கும் உள்நாட்டு விமானச் சேவைகள் தொடங்கப்பட்டுள்ளன.
இன்று காலை சென்னையில் இருந்து முதல் விமான கிளம்பிச் சென்றது.
விமானத்தில் பயணம் செய்வோருக்கு முகக் கவசம் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன.
விமான நிலையத்தினுள் சமூக இடைவெளி கடைப்பிடிக்கப்படுகிறது.
[youtube https://www.youtube.com/watch?v=tGQoNjFPsEo]