சென்னை:

த்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்பட்ட 2017 ஆம் ஆண்டு முதன்மைத் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு  மனிதநேய இலவச பயிற்சி மையத்தில் இன்று முதல் பதிவு செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை முன்னாள் மேயர் சைதை துரைசாமி, , “மனிதநேயம்  ஐ.ஏ.எஸ். கட்டணமில்லா கல்வியகம்”  மூலம் மத்திய தேர்வாணைய தேர்வுகளுக்கு இலவசமாக பயிற்சி அளித்து வருகிறார்.  தமிழ்நாடு அரசு தேர்வாணையம் நடத்தும் குரூப் 1 குரூப் 2 தேர்வுகளுக்கும் இலவச பயிற்சி அளிக்கப்படுகிறது.

இம்மையத்தில் பயின்று இதுவரை 2955 பேருக்கு மேல் வெற்றி பெற்று மத்திய, மாநில அரசில் உயர் பதவி வகிக்கிறார்கள்.

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்பட்ட 2017 ஆம் ஆண்டு முதன்மைத் தேர்வில் மனிதநேய பயிற்சி மையத்தை சேர்ந்த 64 மாணவ மாணவியர்கள் (19 மாணவிகள்/ 45 மாணவர்கள்) தேர்ச்சி பெற்றுள்ளனர்.

இன்று முதல் நேர்முகத் தேர்வு பயிற்சிக்கு கீழ் கொடுக்கப்பட்டுள்ள இணைய இணைப்பை பயன்படுத்தி பதிவு செய்யலாம்

https://docs.google.com/forms/d/e/1FAIpQLSfLuuVFLSzb2–26rkZQ4d3M1gKkzFEHDrIFl5ZrkEyr-Lo-g/viewform

 

மேலும் “www.saidais.com இணையதளம் மூலமாகவும் பதிவு செய்யலாம்.