சென்னை: 
க்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தவே இலவசத் திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது என்று    முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டின் முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவியேற்று இன்றோடு 100 நாட்கள் நிறைவடைகிறது.

இந்நிலையில், பிரபல ஆங்கில நாளிதழுக்கு  முதல்வர் மு.க. ஸ்டாலின் அளித்த பேட்டியில், தேர்தல் வாக்குறுதிகளை நிச்சயம் நிறைவேற்றுவோம் என்றும், கடும் நிதி நெருக்கடி நிலவும் நிலையிலும், இலவசத் திட்டங்கள் செயல்படுத்தப்படுவது மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தவே என்றும் தெரிவித்தார்.

தமிழ்நாட்டின் முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவியேற்ற 100 நாட்களில், பெட்ரோல், பால் விலை குறைப்பு, பெண்களுக்கு இலவச பேருந்து உள்ளிட்ட தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.