சென்னை:
மிழகத்தில் உள்ள ரேஷன் கடைகளின் மூலம் பொதுமக்களுக்கு இலவசமாக முகக்கவசம் வழங்கும் நிகழ்வு விரைவில் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி முகக்கவசங்களை வழங்கி  விரைவில், தொடங்கி வைப்பார் என கூறப்படுகிறது.

கொரோனா பரவலை தடுக்கும் வகையில் தமிழகத்தில் பல்வேறு நடவடிக்கைகளை தமிழக அரசு முடுக்கி விட்டுள்ளது. இதையடுத்து,  தமிழகத்தில் உள்ள அனைத்து குடும்ப அட்டை தாரார்களுக்கும் இலவசமாக முக கவசம் வழங்க அரசு செய்துள்ளது.
அதன்படி, தொற்றி பரவலில் இருந்து மக்கள் தங்களை பாதுகாத்துக்கொள்ளும் வகையில்,  6 கோடியே 74 லட்சத்து 15 ஆயிரத்து 899 பேர்களுக்கு தலா இரண்டு முக கவசங்கள் வழங்கப்பட உள்ளது.
இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.  மறு பயன்பாடு செய்யக் கூடிய வகையிலான துணி முக கவசங்களாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
இதையடுத்து, இலவச முக கவசங்களை மக்களுக்கு வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி விரைவில் துவக்கி வைக்க இருப்பதாக கூறப்படுகிறது.
முதல்கட்டமாக தற்போது,  4 கோடி முக கவசங்கள் தயாராக உள்ள நிலையில், விரைவில் மீதமுள்ள முக கவசங்கள் தயாரிக்க உத்தரவிடப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.