கொழும்பு

லங்கையில் வீசும் கடும் புயலால் நால்வர் மரணம் அடைந்துள்ளனர்

இலங்கையில் கடும் புயல் வீசி வருகிறது.  இலங்கை பேரிடர் கட்டுப்பாட்டு மையம் இன்று இலங்கையில் சுமார் 150 மிமீ மழை பெய்யக் கூடும் என அறிவித்துள்ளது.  மேலும் இந்த மழை மற்றும் புயலால் 4 பேர் மரணம் அடைந்துள்ளதாகவும் 13 மீனவர் உட்பட 23 பேர் காணவில்லை என தெர்வித்துள்ளது.

காணாமல் போன 13 மீனவர்கள் 4 படகில் சென்றுள்ளதாகவும் அவர்களை தேடும் பணியில் இலங்கை கடற்படை ஈடுபட்டுள்ளதாகவும் அரசு அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது.